வடிவங்கள் தாண்டி, தாம் செயல்பட்ட விதங்கள் தாண்டி, ராஜீவனின் வாழ்க்கைப் பார்வை மிகத் தீவிரமானது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கேலியின் வழியாக, நகைச்சுவையின் வழியாக அதைத் தெரிவிக்க முயன்றார் என்றே படுகிறது. அதுவே அவரது வாழ்நாள் முயற்சியாக இருந்திருக்கிறது. இப்படி யோசிக்கும்போது, ஒட்டுமொத்த ப்ரணய சதகமே காதல்மீது அவருக்கிருந்த பகடியான அபிப்பிராயம்தானோ என்றும் தோன்றுகிறது.
