இயற்கையின் பல்வேறு இழைகளைக் காட்டும் அருமையான ஒளிப்படங்களின் அணிவகுப்பு இந்த இணைப்பில்!
Author: ஆசிரியர் குழு
பண்டிட் ரவிஷங்கர் (1920 – 2012)
சிதார் மேதை பண்டிட் ரவிசங்கர் இவ்வாண்டு டிசம்பர் 11ம் தேதியன்று தனது 92வது வயதில் காலமானார். இந்திய செவ்வியல் இசையை உலக அளவில் எடுத்துச் சென்று அதன் நவீன பரிமாணங்களும் வெளிப்படக் காரணமாக இருந்த இந்த தலைசிறந்த இசைக்கலைஞரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பெருஞ்சோகம். பண்டிட் ரவிசங்கரின் மறைவுக்கு “பண்டிட் ரவிஷங்கர் (1920 – 2012)”
வாசகர் மறுவினை
அண்மையில் சொல்வனம் இதழில் நான் படித்தவற்றில் ஆகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று. இணையம் மற்றும் அச்சு ஊடகங்களால் பரபரப்பிற்காக திரிக்கப்பட்டு வெளியிடப்படும் அறிவியலின் தற்கால நிலையையும், அறிவியல் துறையில் இல்லாமலேயே அறிவியலைப் பற்றி எழுதும் அரைபண்டிதர்களைப் பற்றியும் அறிவியல் இயங்கும் விதம் பற்றிய அறிவு இல்லாமல் அங்கலாய்ப்பவர்களைப் பற்றியும் நகைச்சுவையுடன், அண்மைய உதாரணங்களோடு சாட்டையடியாக எழுதியிருக்கிறார் அருண்.
நிலப்பரப்புகளின் வண்ணங்கள்
நேஷனல் ஜியோகிரபிக் நிறுவனம் சமீபத்தில் நடத்திய புகைப்பட போட்டிக்கு வந்த புகைப்படங்களில் சில இங்கே.
எறும்புகளின் ரகசிய சக்தி
நாம் பலமுறை பார்த்து உதாசீனமாகக் கடந்து சென்ற எறும்புகளைப் பற்றிய சுவாரசியமானதொரு விவரணப் படம்.
மகரந்தம்
காஸா போரில் பல கடும் பிரச்சினைகளின் உண்மை முகங்கள் தெரிய வருகின்றன. உலக நாடுகளின் பல சாய்வுகளும் புலப்படுகின்றன. சில நாடுகள் இரண்டு பக்கமும் பங்கெடுக்கும் நிலையில் உள்ளனர். இவற்றின் நடுவே, எங்கும் வெடிகுண்டுகளும், ராக்கெட்டுகளும் வெடித்துக் கொண்டிருக்கையில் அதிகம் வெளித் தெரியவராத போர் ஒன்றும் நடக்கிறது. உலகில் இப்போது நாடுகள், அவற்றின் ராணுவங்களைத் தவிர வேறொரு சக்தியும் உருவாகி உலவுகிறது. நிஜமாகப் பார்த்தால் இப்படி நாடுகளின் வடிவுகளைத் தாண்டிய பல சக்திகள் சில பத்தாண்டுகளாக உலக அரசியல் இழுபறிகளில் பங்கெடுத்து வந்திருக்கின்றன
கானுயிர் புகைப்படங்கள்
BBC நிறுவனமும் தேசிய வரலாற்று அருங்காட்சியகமும் கானுயிர் புகைப்படங்களுக்கான ஒரு சர்வதேச அளவிலான ஒரு போட்டியை அறிவித்தது. 98 நாடுகளிலிருந்து 48,000 புகைப்படங்கள் குவிந்தன. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 10 புகைப்படங்கள் இங்கே.
தீபாவளி
தீபாவளி – நன்மைகளின் எழுச்சியும் திருவிழா. இந்திய கலாச்சார ஒற்றுமையின் சின்னங்களில் ஒன்று. வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மகரந்தம்
கருத்துக் கட்டுப்பாடு (சென்ஸார்ஷிப்) கடுமையாய் உள்ள இரான் போன்ற நாடுகளிலும் இரானியத் தயாரிப்பாளர்கள் வேறு நாடுகளில் திரைப்படங்களை உருவாக்கி உலக அரங்கில் அவை காட்டப்படுவது பல வருடங்களாய் நடந்து வருகிறது. சமுதாய, அரசியல் மற்றும் கருத்து மாற்றங்களுக்கு ஒரு கருவியாய் தயாரிக்கப்படும் இத்தகைய திரைப்படங்கள் உலகப்பட விழாக்களில் பெரிதும் விவாதிக்கப்படுகின்றன.
மகரந்தம்
மேதாவிகள், மேதாவிகளாகவே தான் பிறக்கிறார்களா? இல்லை, தாம் வளரும் சூழல், தமக்கு கிடைக்ககூடிய கல்வி அவர்கள் மேதமையைத் தீர்மானிக்கிறதா? மேதைமை அபாரமான படைப்பூக்கமாகவும் இருக்கலாம், ஒருவகை கிறுக்குத்தனமாகவும் இருக்கலாம். இல்லை, ஒருவரது பிறவி பலவீனத்தால் வாய்க்கும் அரிய திறனாகவும் இருக்கலாம். அதற்கென ஒரு பொதுவான சமன்பாடு இருக்கிறதா?
ஒளிவழி ஒழுகும் உலகம்
இயற்கைசக்திகளை தம் அறிவால், ஞானத்தால் தமக்கு சாதகமாய் வளைத்திருப்பதாய் மனிதகுலம் இறுமாந்திருக்கையில், தாவரங்களும், சிறிய பாக்டீரியாக்களும் சூரிய ஒளியை உபயோகித்து இப்பூமியில் உயிரினம் உருவாக எப்படி வழி வகுத்தன, நம் முன்னோர் தோன்ற அவை எப்படி காரணமாய் இருந்தன என்பதை விளக்கும் அருமையான வீடியோத் தொடரின் முதல் விடியோ “ஒளிவழி ஒழுகும் உலகம்”
அகத்தின் அழகு
நம் வாழ்க்கை அனுபவங்கள் நம் மனதை மட்டுமன்றி புறத்தோற்றத்தையும் மாற்றும் வலிமிஅகொண்டவையா? இதோ ஆஃப்கானிஸ்தானத்தில் போரில் ஈடுபட்டுத் திரும்பிய ராணுவவீரர்களின் படங்கள் – போர் அனுபவத்துக்கு முன்பும், அதன் பின்பும். பனிரெண்டே மாதங்களில் அவர்கள் முகத்தின் மாற்றங்கள் என்ன சொல்கின்றன? அந்தக் கண்களில் என்ன தெரிகின்றன? http://www.slate.com/blogs/behold/2012/10/17/claire_felicie_s_photographs_marines_faces_before_during_and_after_afghanistan.html
DILLI – தில்லி
தில்லி (DILLI) என்ற இந்த விவரணப்படம், பிற மாநிலங்களிலிருந்தும், சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும், தில்லி பெருநகருக்குப் பிழைப்பு தேடி வரும் கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்துகிறது. வெகுசிறப்பான ஒளிப்பதிவுடனும், நேர்த்தியான இசையுடனும் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறது. இப்படத்தின் வெற்றி, விவரணப்படங்களுக்கு இந்தியாவில் இருக்கும் தேவையைச் சுட்டுவதாக இருக்கிறது.
பார்வையிழந்தவர்களின் ஒளிப்படங்கள்
இந்த வாரம் தில்லி ஃப்ரெஞ்ச் கலாசார மையத்தில் பார்வையிழந்தவர்கள் மற்றும் பார்வைக் குறைபாடு உடையவர்கள் எடுத்த ஒளிப்படங்களின் கண்காட்சி நடைபெறுகிறது. இப்படங்களில் சிலவற்றின் தொகுப்பை பிபிஸி இணையதளம் வெளியிட்டிருக்கிறது. ஒலியின் நகர்வு, தொடுவுணர்வு ஆகியவற்றைக் கொண்டே எடுக்கப்பட்டிருக்கும் இப்படங்கள் வெகு நேர்த்தியாக இருப்பதோடு, பார்வையிழந்தவர்கள் உலகைப் பார்க்கும் விதத்தை “பார்வையிழந்தவர்களின் ஒளிப்படங்கள்”
மகரந்தம்
பாம்புகள் என்றால் நம்மில் பலருக்கு அதீதப் பயம். குரங்குகளுக்கும் பாம்புகளைக் கண்டால் பயம். மனிதர்களின் பாம்பு குறித்த பயம் குரங்குகளாக இருந்த காலத்திலிருந்து தொடர்வது என்று சில உளவியலாளர்கள் சொல்கிறார்கள் என்றாலும் அதெல்லாம் ஏதோ ஹேஷ்யம் போலத்தான் தெரிகிறது. ஆனால் ஏன் நம்மிடம் சில குணங்கள் இருக்கின்றன என்று தெரிந்ததால் பயம் போய் விடுகிறதா என்ன?
க.நா.சு சிறப்பிதழ்
இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் (விமரிசனம் உட்பட) நவீனத்துவம் துரிதப்படத் துவங்கியதற்குக் கிரியா ஊக்கியாகவும், தாமே பலவற்றில் உதாரணமாக இருந்த ஒருவர் க.நா.சுப்ரமண்யம். அவருடைய தீவிர விமர்சகர்கள் கூட அவரது திறமை, கூர்மை, உழைப்பு ஆகியவற்றையும், தமிழிலக்கியத்துக்கு அவர் கொடுத்த பெரும் கொடைகள் பற்றியும் குறை சொல்வதில்லை.
கருத்தியல் சார்புகளோ, அரசியல் நிலைபாடுகளோ, சமுதாயப் பண்பாட்டு அணிவகுப்புகளில் சாரிகளோ இல்லாத ஒரு நபர் பல பத்தாண்டுகள் தமிழிலக்கியத்தில் தாக்குப் பிடித்து நின்று பல தரப்பினரின் மரியாதையைப் பெறுவதென்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை. க.நா. சுப்ரமண்யம் என்கிற ஒரு நபர் 20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் வாழ்ந்து இதைச் சாதித்திருக்கிறார். இந்த ஆண்டு அவர் தோன்றி நூறாண்டு ஆகிற வருடம்.
சொல்வனத்தின் 75ஆம் இதழை, அவருடைய நூற்றாண்டு நினைவுச் சிறப்பிதழாகக் கொண்டு வரத் தீர்மானித்ததற்கு இந்தப் பொது நிலையை அவர் பெற்றிருப்பது குறித்து எங்களுக்கிருக்கும் வியப்பும் ஒன்று.
மகரந்தம்
சீனாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும் பணக்காரர்களாக இருந்தால், சிறையைப் பார்க்கத் தேவை இல்லையாம். அட, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கும் போலிருக்கிறதே என்கிறீர்களா? இங்கு ஏதோ ஓரிரண்டு தினங்கள் கண் துடைப்பாகவாவது சிறைக்குப் போவார்கள். அதை மகத்தான தியாகம், பகுத்தறிவு இயக்கத்திற்காகப் பலியானோம் என்று புரளியும் செய்வார்கள். அங்கு அதெல்லாம் கூடத் தேவை இல்லையாம். ஆனால் யாரையோ சிறைக்கு அனுப்பியே தீர வேண்டும் என்பதால், தமக்குப் பதிலாக இன்னொரு நபரைச் சிறைக்கு அனுப்பி வைப்பார்களாம் பணம் குவித்தவர்கள்.
பாதசாரிகளின் புகைப்படங்கள்
நேஷனல் ஜியோகிரபிக் நிறுவனம் பயணப் படுவோரின் புகைப்பட போட்டி ஒன்றை நடத்தி அதன் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. பிரமிக்க வைக்கும், லயிக்க வைக்கும் காட்சிகள். இங்கே பார்க்கலாம்.
வி.எஸ்.நரசிம்மனின் சங்கம இசை
பிரபல வயலின் கலைஞர் வி.எஸ்.நரசிம்மன் தனது குழுவினருடன் கர்நாடக இசையில் அமைந்த ‘மோக்ஷமு..’ என்ற பாடலை மேற்கத்திய Quartet பாணியில் இசைக்கிறார். மனதை லயிக்க செய்யும் கலை வடிவம்.
The Artic Circle – குறும்படம்
வாசகர் மறுவினை
முந்தைய இதழ்கள் குறித்து வாசகர்களின் மறுவினை.
மகரந்தம்
முன்பு வழக்கம்போல விவசாயிகள் இன்னும் மண்குடிசைகளில் இருந்து இதை உற்பத்தி செய்தனர், இடைத் தரக நிறுவனமான ஹாலிபர்டன் என்ற அமெரிக்க நிறுவனம் பெரும் லாபத்தை அள்ளிக் கொண்டது. சமீபத்தில் விவசாயிகளின் எதிர்ப்பால் அவர்களுக்குக் கிட்டும் பங்கு உயர்ந்திருக்கிறதாம். இதுவுமே இன்னும் அமெரிக்க நிறுவனத்துக்குத்தான் லாபம் பெருமளவில் போகிறபடி இருக்கும். அமெரிக்கர்கள் லாபத்தைப் பிறருக்கு விட்டு விடுவார்களா என்ன? ஆனால் ஏதோ ஒரளவு ராஜஸ்தானின் விவசாயிகள் வாழ்வில் சிறிது முன்னேற்றம் வந்திருக்கிறது. மண் குடிசைகளை விட்டு, கல் கட்டிடங்களுக்கு நகர்ந்திருக்கிறார்களாம்.
மகரந்தம்
நாய்களின் மோப்ப சக்தியை கேன்ஸர் போன்ற வியாதிகளை கண்டுபிடிப்பதற்கும் உபயோகப்படுத்தலாம் என்று இன்றைய மருத்துவம் சொல்கிறது. ஆடிஸம், ஆஸ்பெர்ஜெர் போன்ற நோய்குறித்தொகுதிகள் உள்ளவர்களுக்கு நாய்களின் அண்மை அமைதியைக் கொடுக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டு இன்று அத்தகையவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் லேப்ரடார் போன்ற நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன
வாசகர் மறுவினை
சென்ற இதழில் பிரகாஷ் சங்கரன் எழுதியிருந்த கட்டுரை மிக உபயோகமுள்ளதாக இருந்தது. அறிவியல் ரீதியாக துல்லியமான தகவல்கள் மட்டுமல்ல, இந்த மருத்துவ தொழில்நுட்பத்தின் சமூகத் தாக்கம், பக்க விளைவுகள், அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவற்றை அலசியதும் நன்று.
பெங்களூரு வாடகை ஆட்டோ
தினசரி நாம் உறவாடும் வாடகை ஆட்டோவின் ஒரு நாள் வாழ்க்கை.
மகரந்தம்
ஃபேஸ்புக் தளத்தின் பங்கேற்பாளர்கள் கிட்டத்தட்ட 1 பில்லியன். இது ஒரு சாதாரண வெளி அல்ல. இங்கு நடைபெறும் சந்தைப்படுத்தல் என்பது நிச்சயம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் புகழும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழும் ஃபேஸ்புக்கின் அதே உத்தியை பயன்படுத்துகிறது. அதற்கு கூடுதல் கவனம் கிடைப்பதாகச் சொல்கிறார். ஆனால் அதை நிரூபிக்க போதுமான தரவுகளை இவர் தரவில்லை.
பாலசரஸ்வதி குறித்து சத்யஜித் ராயின் குறும்படம்
நாட்டியக் கலையின் முக்கிய ஆளுமையான பாலசரஸ்வதி குறித்து சத்யஜித் ராய் இயக்கிய குறும்படம் கீழே. பின்னணிக்குரலும் அவரே.
அபார புகைப்படங்களும் ஒரு புதிர் போட்டியும்
போட்டியை நடத்துவது சொல்வனம் அல்ல, வேறு ஒரு ஆங்கில பத்திரிக்கை. கூகுள் நிறுவனத்தின் வரைப்படங்களை அளிக்கிறது. அப்படங்களில் உள்ள நிலப்பரப்பு எந்த நாட்டை சேர்ந்தது என்று கண்டுபிடிக்க வேண்டும். சுவரஸியமான விளையாட்டு. ஆச்சரியமான நிலப்பரப்புகள். முழுத் தொகுப்பையும் இங்கே காணுங்கள்.
மகரந்தம்
F-22 ராணுவ விமானி ஒருவர், அந்த விமானத்தின் ஒரு பகுதி சுவாசக் காற்றை நச்சுக் காற்றாக மாற்றுகிறது, அது தனக்கு ஆபத்தை தருவதாக சொல்கிறார். இந்த காரணத்திற்காக விலை அதிகமான ஒரு விமானத்தை மாற்ற முடியுமா? சத்தம் போடாம இரு என்று அமெரிக்க ராணுவம் சொல்கிறது. அவரை ராணுவ ஒழுக்கத்தை மீறியதாக குற்றம் சாட்ட முயற்சி நடக்கிறது. ஒரு வழியாக ‘Whistleblower Act’ மூலம் அவரை இப்போதைக்கு காப்பாற்றியிருக்கிறார்கள். இதில் இருக்கும் ஒரு விஷயம் : விலை உயர்ந்த ராணுவ தளவாடத்திற்கு பதிலாக ஒரு மனித உயிரை விலை பேசலாம் என்ற எண்ணம். சமூகத்திற்கு முதலியம் அளிக்கும் சிந்தனை இது.
வாசகர் மறுவினை
பிரபஞ்சம் தொடர்பாக நான் கொண்டிருந்த எண்ணக்கரு, தெளிவாகவும் கோவையாகவும் வாசிப்பதற்கு எளிதாகவும் விளக்கி எழுதப்பட்டிருப்பதனைக் காண்கையில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
24 மணி நேரம்
ஒரு 24 மணி நேரத்தில் உலகின் பல பகுதிகளிலும் உள்ள மக்களின் வாழ்வை பதிவு செய்யும் ஒரு படத் தொகுப்பு இங்கே.
பூண்டு – ஒரு கவிதை
சொல்ஜாலம் அதிகம் இல்லாமல், சொல்லால் மனிதர் எப்படி விடுவிக்கப்பட முடியும், எதார்த்தம் சூழலில் எத்தனை கடுமையாக இருந்தாலும் ஒரு சொல் ஜாலம் ஏதோ செய்து விடுவிப்பைக் கண நேரமாவது கொணரும் என்று சொல்லும் கவிதை. இக்கவிதையை எழுதியவ்ர் ஒரு பஞ்சாபி. அதை வாசிப்பவர் ஓவியம்/ கலை ஆகியவற்றைப் பற்றி “பூண்டு – ஒரு கவிதை”
வாசகர் மறுவினை
இது என்ன எல்லாரையும் போல சொல்வனமும் பின்னே ஞானும் என்று தலைப்புப் பஞ்சத்தைப் போக்கிக் கொள்ளத் தரம் தாழ்ந்து விட்டதே என்று ஒரு கணம் துணுக்குற்றேன். ஆனால் பார்த் சுயம் உட்பட அனைத்தையும் பிரதி வாசிப்பாகப் பார்த்தவர் என்று தொடங்கி, போர்ஹே அனைத்து பாத்திரங்களிலும் வாசகன் தன்னைப் பார்ப்பதான புரிதலைத் தருகிறார் என்று சொல்லி, டயர் பார்த் இருந்த இடத்திலிருந்து போர்ஹேவின நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார் என்பதை மைத்ரேயன் எவ்வளவு அழகாக விவரிக்கிறார்.
மகரந்தம்
ரோபாட்களால் உடனடியாக என்ன பெரும் பயன் என்பதை நம்மால் காண முடியாதது, சில பத்தாண்டுகள் முன்பு கணினி எந்திரங்களால் என்ன பயன் என்று இந்திய அரசாலும், இந்திய அரசு அதிகாரிகளாலும், இந்திய முற்போக்குகளாலும் காண முடியாததை ஒத்ததே.
மேலிருந்து…
நம் உலகை கொஞ்சம் உயரத்திலிருந்து பார்க்கலாம். இங்கே செல்லுங்கள்.
ஒன்றுமில்லாததிலிருந்து உருவாகிய பிரபஞ்சம்
இந்த சொல்வனம் இதழில் கோரா மொழிபெயர்த்திருக்கும் லாரன்ஸ் க்ரெளஸ் எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. லாரன்ஸ் க்ரெளஸ் தன்னுடைய பிரபலமான புத்தகமான ‘A Universe from Nothing’ இன் சாரத்தை ஒரு விரிவுரையாகப் பேசுகிறார். அவருடைய நுட்பமான நகைச்சுவையுணர்வும், தெளிவான, எளிமையான விளக்கங்களும் இவ்வுரையை வெகு சுவாரசியமான ஒன்றாக்குகின்றன. “ஒன்றுமில்லாததிலிருந்து உருவாகிய பிரபஞ்சம்”
வாசகர் மறுவினை
கடந்த பல பத்தாண்டுகளில், உலக அளவில் ஆங்கிலத்தில் எழுதப் படும் எல்லா வரலாற்று நூல்களிலும் பொதுயுகம் என்று தான் குறிப்பிடுகிறார்கள். தமிழில் இது பற்றிய அறிதல் இன்னும் வந்து சேரவில்லை போலும். அதனால் பழைய பெயர்களையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கி.மு, கி.பி, என்பதற்குப் பதிலாக பொ.மு, பொ.பி. என்ற வழக்கை நாம் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். வரலாறு குறித்த எனது கட்டுரைகள் எல்லாவற்றிலும் அப்படித்தான் நான் எழுதி வருகிறேன்.
மகரந்தம்
தொழில்முறைப்பட்ட விவசாயம் குறைப்பார்வையோடு பரந்த வகைகள் கொண்ட விவசாயத்தை மிகச் சில வகைகளான விதைகளில் குறுக்கி நாசத்தைக் கொணரவிருக்கிறது. நாம் பாரம்பரிய விவசாயத்தை முற்படுத்தி பன்முகப்பட்ட விளைச்சல் முறைகளைக் கொணர்வது மிக மிக அவசியம். இந்தியாவின் பாரம்பரிய விவசாயிகள் வெகு காலமாக இதைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நகரத்தின் அறிவாளர்கள் அவர்களை இளக்காரமாகப் பார்த்து இந்திய விவசாயத்தை பெருமளவு நாசம் செய்திருக்கிறார்கள்.
வீட்டுக் குருவிகளைக் காப்போம்!
வீட்டுக் குருவிகளைக் காக்கும் இந்த மக்கள் அறிவியல் திட்டத்தில் பங்கேற்க உங்களை அழைக்கிறோம்.. வீட்டுக் குருவிகள் நம் நாடெங்கும் எந்த நிலையில் உள்ளன, எந்தப் பகுதிகளில் பரவலாகவும் எங்கு குறைவாகவும் உள்ளன என்பது குறித்து நீங்கள் பகிரக்கூடிய தகவல்கள் முக்கியமானவை. http://www.citizensparrow.in என்ற தளத்தில் ஒரு ஐந்து நிமிட அளவில் நீங்கள் உங்கள் சுற்றுவட்டாரத்தில் குருவிகளின் இருப்பை ஆவணப்படுத்துவதன் மூலம் இந்தியாவெங்கும் உள்ள வீட்டுக் குருவி ஆர்வலர்களோடு நீங்களும் உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள்.
இசையும், மூளையும்
செவ்வியல் இசைக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பைப் பேசும் பிரபல எழுத்தாளரான ஒலிவர் சாக்ஸ் பங்கு பெரும் ஒரு சுவாரசியமான காணொளி.
World Earth Day 2012
World Earth Day 2012 குறித்த சில அருமையான ஒளிப்படங்களை இங்கே பார்க்கலாம்.
ஒரு ஐ-பேட் மேஜிக்
ஐரோப்பாவின் பல பெருநகரங்களுக்கு பல உத்திகளைக் கையாண்டு நிறைய பணம் செலவு செய்து விளம்பரங்கள் செய்கிறார்கள். அதன் மூலம் நிறைய வணிக முதலீடுகளும், உலகளாவிய கவனமும், சுற்றுலா வருவாயும் கிடைக்கின்றன. இது ஆப்பிள் யுகம். ஐ-பேட் கருவியைக் கொண்டே ஒரு மேஜிக் நிகழ்ச்சி மூலம் ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமுக்கு “ஒரு ஐ-பேட் மேஜிக்”
ராணுவ தருணங்கள்
அமெரிக்க ராணுவப் பயிற்சியின்போது அவ்வீரர்களின் மனநிலைகளை காட்சிப்படுத்தும் புகைப்படத் தொகுப்பு ஒன்று இங்கே. மனிதர்கள் மாறுபடலாம். உணர்வுகள் ஒன்றுதான்.
மகரந்தம்
என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தொகுப்பு வருடா வருடம் அச்சிடப்பட்டுக் கொண்டிருந்தது. உலக மையமே பிரிட்டன் என்பது போன்ற, பிபிசி போன்ற செய்தி ஸ்தாபனங்களின் மமதை பிடித்த பார்வை இந்த புத்தகத் தொகுப்புக்கும் இருந்தது. இந்த புத்தகத்தை இனிமேல் அச்சிடப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். மரங்கள் கொஞ்சம் பிழைக்கும்.
அன்புள்ள வாசகர்களுக்கு…
போக வேண்டிய தூரம் வெகு அதிகம் என்பதையும் நாம் அறிவோம். இப்பயணத்தில் தங்கள் உறுதுணையே எங்கள் பேராதரவு. சொல்வனம் தொழில் முறையில் இல்லாத, வியாபார நோக்கு அற்ற, மனிதரிடையே பிரிவினை செய்யும் எதையும் ஏற்காத, எளிமையும், உண்மைத் தேட்டமும் உள்ள, தங்களை முன்னிறுத்த முயலாத வெகு சிலரால் நடத்தப்பட்டு வருகிறது. சொல்வனத்தின் பல வேலைகளையும் இந்த சிலரே செய்கிறோம்.
ஃபூகுஷீமா கோரம் குறித்த ஆவணப் படம்
ஹோலி – இந்தியாவின் வண்ணங்கள்
இந்தியாவின் பன்மைத் தன்மையை, கலாச்சார மேன்மையை இன்றளவும் வலியுறுத்தி வரும் ஹோலி பண்டிகையின் புகைப்படத் தொகுப்பு இங்கே.
மகரந்தம்
நன்கு பயின்ற, கல்வியிலும் தொழிலிலும் வெற்றி கண்ட சீன இளைஞர்கள் நாட்டை விட்டு நீங்கி மேற்குக்கு குடி பெயர்வதையே நாடுகிறார்கள். ஏன்? அவர்களைப் பொறுத்தவரை சீன அரசாங்கத்தை நம்பி எதையும் செய்துவிட முடியாது. தடாலடியாக எதையாவது செய்து அவர்கள் எதிர்காலத்தை சீன அரசு குழியில் தள்ளிவிடும் என்று நினைக்கிறார்கள்.
மகரந்தம்
மணமாகாதவர்கள் மணம் புரிவதாலும், மணமானவர்கள் மணமுறிவு செய்து கொள்வதாலும் ஒரு இல்லம் இருக்கிற இடத்தில் இரண்டு உருவாகி, அதன்மூலம் புதிய வீடுகள், அவற்றுக்குத் தேவையான நுகர்பொருள் வர்த்தகம் மற்றும் செலவுகள் அதிகரித்து பொருளாதாரம் மேம்படும் என்பது ஒரு சுவையான முரண்நகை.
ஒற்றைப் புராணம் (Mono Myth)
நம் கல்விமுறை புராணங்களை எப்படி அணுகவேண்டும் என்று கற்றுக் கொடுத்துள்ளது. கிழக்கத்திய புராணங்களை ‘கட்டுக் கதைகள்’ என்றும், மேற்கத்திய புராணங்களை ‘விவிலிய உண்மை’ (bibilical truth) என்றும் அணுகச் சொல்கிறது. ஆனால் ஜோசப் கேம்பெல் எனும் புராணவியலாளர் புராணங்களை வெறும் கட்டுக்கதைகளாகவும், மூடநம்பிக்கைகளின் வெளிப்பாடுகளாகவும் மட்டுமே காணும் போக்கை “ஒற்றைப் புராணம் (Mono Myth)”
