பாஸ்னியக் காப்பி

‘யானைகளின் யுத்தத்தில் அழிவது எறும்புகளே’ என ஒரு சொலவடை உண்டு. அதேபோல அமேரிக்கா – சோவியத் ரஷியா வல்லரசுகளுக்கு இடையேயான பலப்பரீட்சை பெரும்பாலும் அவர்களால் தூண்டிவிடப்பட்ட சிறிய நாடுகளின் யுத்தங்கள் வாயிலாக வெளிப்பட்டது. இந்த ‘கோல்டு வார்’ அல்லது மறைமுக பனிப்போரில் சிக்காமல் இந்தியா, எகிப்து, யூகோஸ்லாவியா, கானா மற்றும் இந்தோனேஷியா ஆகிய வளரும் நாடுகள் தங்களுக்குள்ளே ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும் கூட்டமைப்பே “கூட்டு சேரா இயக்கம்”.

அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்!

எஸ்பிபியின் மறைவுச் செய்தி கேட்டபின் நாள் முழுதும்  உறைந்திருந்த நான் இரவெல்லாம் விழித்திருந்து இதை எழுதுகிறேன். எது என்னை உந்துகிறது  என்பது தெரியவில்லை. அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை, அவர் முறித்த சாதனைகள், பாடிய மொழிகள், பெற்ற விருதுகளின் பட்டியல் போன்றவற்றை பேச வேண்டாம் என்று தோன்றுகிறது. எஸ்பிபி “அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்!”

'காலமே, இந்த்ரஜாலமே!'- ஐன்ஸ்டீன்

நீங்கள் மிக அதிக வேகத்தில் பயணங்கள் மேற்கொள்ளும் பட்சத்தில், உங்களைச் சுற்றியுள்ள வெளி மட்டும்தான் மாறுகிறது என்பதல்ல, காலமும் ஒரு பச்சோந்தியைப் போல் சூழலுக்குத் தகுந்த வகையில் தன்னை மாற்றிக் கொள்கிறது! …. ஐன்ஸ்டீன் சொல்வதை இப்படி சுருக்கமாகச் சொல்லலாம்- நகர்ந்து கொண்டிருக்கும் கடிகாரத்தில் காலம் தாமதிக்கிறது. இது உண்மைதான் என்று பல பரிசோதனைகள் கண்டறிந்துள்ளன. இவற்றில் மிக சுவாசரியமான ஒரு ஆய்வில், நான்கு அணுத்துகள் ஆற்றல் கடிகாரங்கள் ஒரே நேரம் காட்டும் வகையில் திருப்பி வைக்கப்பட்டன. அவற்றுள் சிலதை அதிவேக ஜெட் விமானங்களில் வெவ்வேறு திசைகளில் உலகைச் சுற்றி கொண்டு சென்றனர். அந்த விமானங்கள் திரும்பி வரும்போது, பூமியில் இருந்த கடிகாரங்களை விட விமானத்தில் பறந்து சென்ற கடிகாரங்கள் ஒரு சில நானோ வினாடிகள் மெல்லச் செல்வது கண்டறியப்பட்டது. ஆக, வேகமாய்ச் செல்லும் விமானமும்கூட காலத்தின் சிறகை, அதாவது கடிகார முள்ளை, கொஞ்சம் கட்டி வைக்கிறது. …

ஒலியன்றி வேறல்ல: இளையராஜாவின் ஆதார சுருதி

இசை, நடனம், இலக்கியம், ஓவியம் முதலிய நுண்கலைகளின் பின்னிருக்கும் ஆற்றல் எது? வேறு எந்த வகையிலும் புலப்படுத்த முடியாத உணர்ச்சிகளை ஆன்மாவின் அந்தரங்க உணர்வுகளாக வெளிப்படுத்தும் ஆற்றல்தான். இந்த இரு தனியிசைத் தொகுப்புகளும் இளையராஜாவின் சிந்தனையோட்டத்தை நாம் அறியக்கூடிய சாளரங்கள். இவற்றில் அவர் இசையைக் கொண்டு தன் அக உணர்வுகளுக்கு புற உருவம் தந்திருக்கிறார்.

ஆதாரமற்ற பொருளாதாரம் – பகுதி 3

இந்திய நாணயம் சரிந்ததும் அரசும் மத்திய ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே பாடிப்பாடிப் புளித்துப் போன அதே பழைய பல்லவியைப் பாடினர். நாம் அளவுக்கதிகமாய் எரிபொருள்களை உபயோகிக்கிறோம், தங்கம் முதலான அத்தியாவசியமில்லாத உலோகங்களை வீட்டில் சேர்க்கிறோம் என நாட்டு மக்களைக் குற்றம் சாட்டி பெட்ரோல்/ டீசல் விலைகளையும் தங்கம் இறக்குமதி செய்யச் சுங்க வரிகளையும் உயர்த்தின. இவை சரியான காரணங்களா?

ஆதாரமற்ற பொருளாதாரம் – பகுதி 2

வட்டி வீதம் மிகவும் குறைவானாலொழிய மீண்டும் கடன் வாங்கும் சூழலை ஏற்படுத்துவது குதிரை கொம்பான விஷயம். மீண்டும் வங்கிகளிடையே, நிறுவனங்களுக்கிடையே, மக்களுக்கிடையே பணம் புழங்க, அனைவரையும் மேலும் கடன் வாங்க வைக்க, பொருளாதார சந்தையில் வட்டி வீதத்தை குறைத்து மலிவு விலையில் மூலதனத்தை கிடைக்கப் பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும்.

ஆதாரமற்ற பொருளாதாரம் – 1

வங்கிகள் தன்னிடம் காசு இல்லாமலேயே பிறருக்கு கடன் வழங்கிக் கொண்டிருக்கின்றன. என்னிடம் நூறு ரூபாய் இருந்தால்தான் நான் உங்களுக்கு நூறு ரூபாய் கடனாக தர முடியும். ஆனால் கையிருப்பை விட அதிகமாக பிறருக்கு கடன் கொடுக்கும் உரிமை வங்கிகளுக்கு மட்டுமே உள்ளது. அதுவும் பல பல மடங்கு அதிகமாக கடன் கொடுப்பது வழக்கமாகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. இது எப்படி சாத்தியம் ஆகும்?

அந்தப்புரம் இந்தப்புறம்

“ஏன், இந்தியால இதெல்லாம் இல்லன்னு நெனக்கிறியா. நம்ம ஊர்லையே இப்பெல்லாம் இது ஒரு பெரிய விஷயமே இல்ல. கொஞ்ச கொஞ்சமா இந்த மாதிரி மக்கள் எல்லாம் வெளில வர்றாங்களே. மூணு வருஷம் முன்னாடி டெல்லி ஹை கோர்ட்டே இது ஒன்னும் குத்தம் இல்லன்னு டீ-க்ரிமினலைஸ் பண்ணியாச்சே. உங்க நாகமல புதுக்கோட்டையிலேயே தெருவுக்கு நாலு பேரு இந்த மாதிரி தேடினா கெடப்பாதாண்டா. அங்க பெரும்பாலும் யாரும் வெளில சொல்றதில்ல. அவ்வளவுதான் வித்தியாசம்.”

பாரதீப்

1947ல் போர் கப்பல்களின் இஞ்சின் மெயின்டனன்ஸில் இருந்தேன். இந்தியா சுதந்திரம் அடைந்து ஹிந்துஸ்தான், பாகிஸ்தானாக பிரிவினையானபோது, பாதுகாப்பு படை இலாகாவைச் சரியாக எப்படி கையாள்வது என்று யாருக்குமே தெரியவில்லை. அதனால் லார்ட் மௌன்ட்பேட்டன் பிரிவினைக்கு முன்னர் பாதுகாப்பு இலாகாவுக்கு இரண்டு வாரம் கெடு கொடுத்தார். அந்த இரண்டு வாரங்களில் சுதந்திர இந்திய படையில் யாருக்கு சேர விருப்பம், சுதந்திர பாகிஸ்தான் படையில் சேர யாருக்கு விருப்பம் என்று ஒவ்வொருவரையும் கேட்டுப் பிரிக்கச் சொன்னார். என்னிடமும் கேட்டார்கள்

எஸ்.ஜானகி – பத்மபூஷன் இழந்த கெளரவம்

ஜானகி பாடிய பல்வேறு முக்கிய பாடல்களை/ ஒவ்வொருத்தரின் தனி விருப்பபாடல்களை நான் சொல்லாமலே விட்டிருக்கிறேன். காரணம் ஜானகி என்பவர் ஒரு சகாப்தம்/ சரித்திரம் என்றெல்லாம் மார்பு தட்டுவதோ அல்லது அவரின் வாழ்க்கை/தொழில் வரலாற்றை அலசி ஆராய்வதோ இது வரை வாங்கிய விருதுகளை பட்டியலிடுவதோ இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. இந்தியாவின் இரண்டாவது பெரிய கௌரவத்தை புறக்கணிக்கும் அளவிற்கு அவருக்கு இருக்கும் நேர்மையான நிலைப்பாட்டை அங்கீகரிப்பது மட்டுமே.

பாஸ் கிடார் தில்லானா

பாடலின் மைய மெலடிக்கு இணையான முக்கியத்துவத்தை பாஸ்கிடாருக்குக் கொடுத்தார் இளையராஜா. இத்தனைக்கும் பாடல்களில் பாஸ்கிடாரின் உபயோகத்தைக் கவனித்துக் கேட்டு ரசிப்பவர்கள் வெகு சொற்பமானவர்களே. இன்று இணையதளங்களில் கிடார் வாசிக்கத்தெரிந்தவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னதாலும், ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெறும் பல இசைக்கலைஞர்கள் வெகுவாகப் பரிந்துரைத்ததாலுமே ஓரளவுக்கு இளையராஜாவின் பாஸ்கிடார் பகுதிகளைப் பலர் கவனிக்க ஆரம்பிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் இன்னும் வெளியே தெரியாமல் ஒளிந்திருக்கும் பாஸ்கிடார் பகுதிகளுக்குக் கணக்கேயில்லை.

இளையராஜாவின் ஜாஸ் வால்ட்ஸ்

‘உன் பார்வையில்’ என்ற பாடலும் இந்திய இசைக்கருவிகளில் உருவாக்கப்பட்ட ஜாஸ் வால்ட்ஸுக்கு உதாரணம். ஹார்மோனியத்தால் நிறைக்கப்பட்டிருக்கும் பாடலின் ஆரம்ப இசை ஜாஸ் வால்ட்ஸை கற்பனைக்கெட்டாத இடங்களில் பயன்படுத்துவதில் இளையராஜாவுக்கு இருக்கும் ஆளுமையைக் காட்டுகிறது. இப்பாடலின் ஹார்மோனியப் பகுதிகள் இளையராஜாவே வாசித்திருப்பவை. அருமையான ஹார்மோனியமும், தேர்ந்த குரல் வெளிப்பாடும் இப்பாடலின் இனிமையைப் பலமடங்கு கூட்டுகின்றன. இதைப் போலவே கேட்பதற்கு இனிமையான பாடலுக்கான இன்னொரு உதாரணம், எண்பதுகளில் வெளிவந்த ‘கீதம் சங்கீதம்’.

கீதம், சங்கீதம், தேசியகீதம்

சென்றவாரம் கொண்டாடப்பட்ட 64-ஆவது இந்திய சுதந்திர தினத்தையொட்டி வெளியிடப்படும் சிறப்புக் கட்டுரை:
“பெரிய ஆகிருதியைக்கொண்டதொரு மனிதருக்குப் பொருத்தமில்லாத மெல்லிய குரலில் பாடத் தொடங்கினார் தாகூர். அந்தப்பாடலின் முதல் பகுதியில் இந்தியாவின் மாநிலப் பகுதிகளைக் குறித்தும், மலைகளை, நதிகளைக் குறித்தும் ஒரு புவியியல் குறிப்பைத் தந்தார். அடுத்த பகுதியில் இந்தியாவின் பல்வேறு மதங்களைக் குறித்துப் பாடினார். அப்பாடலின் முதல் பகுதியின் கோஷம் எங்கள் காதுகளைத் திறந்தது. இரண்டாம் பகுதியின் கோஷம் எங்கள் தொண்டைகளைச் சரிசெய்ய வைத்தது. அவரை மீண்டும் மீண்டும் அப்பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டோம். இறுதியில் நாங்களும் பெருமிதத்தோடு ’ஜயஹே, ஜயஹே!’ என்று வாய்திறந்து பாடினோம்”.

மௌனத்தின் ஓசை

“கடந்து போகும் காலத்தை எதிர்த்து போராடும் இரு காதலர்கள் தங்களை இனம் கண்டுகொள்ளும் சமயம். அவர்கள் வாழ்வின் அந்த கடைசி வினாடிகள் தம் உயிரின் மேலானது என அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இவை கவித்துவத்திற்காக சொல்லப்பட்ட வெறும் வார்த்தைகள் அல்ல. உண்மையிலே அந்த வினாடிகளுக்குப் பின் அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்”. ஏறக்குறைய இப்படித்தான் பாலச்சந்தர் இந்த பாட்டின் சிச்சுவேஷனை இளையராஜாவிடம் விளக்கியிருப்பார். அந்த உணர்வை இந்தப் பாடலில் இளையராஜா சொல்வதற்கு எடுத்து கொண்ட ஆயுதம் – மௌனம்.

இளையராஜாவுடன் ஒரு ரயில் பயணம்

ரயிலோடு பின்னிப்பிணைந்து அமையும் கதைகளில் அவர் ரயிலை ஒரு கதாபாத்திரமாகவே கருதி இசை அமைக்கிறார். இதை ‘ஆலாபனா’ என்ற தெலுங்கு படத்தின் பின்னணி இசையிலிருந்து எளிதாக அறியலாம். இந்தியத் திரையுலகில் ரயிலை மையமாக வைத்து இசையமைக்கப்பட்ட பாடல்கள், பின்னணியிசைக் கோப்புகளைக் கணக்கில் கொள்ளும்போது இளையராஜாவின் இடம் அதில் நிச்சயம் முதன்மையானதாக இருக்கும்.