ஆதாரமற்ற பொருளாதாரம் – 1

வங்கிகள் தன்னிடம் காசு இல்லாமலேயே பிறருக்கு கடன் வழங்கிக் கொண்டிருக்கின்றன. என்னிடம் நூறு ரூபாய் இருந்தால்தான் நான் உங்களுக்கு நூறு ரூபாய் கடனாக தர முடியும். ஆனால் கையிருப்பை விட அதிகமாக பிறருக்கு கடன் கொடுக்கும் உரிமை வங்கிகளுக்கு மட்டுமே உள்ளது. அதுவும் பல பல மடங்கு அதிகமாக கடன் கொடுப்பது வழக்கமாகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. இது எப்படி சாத்தியம் ஆகும்?