புனரபி ஜனனம்….

நான் செய்த எத்தனையோ செயல்களுக்கு அவரிடம் மன்றாடி மன்னிப்பு கேட்பதற்கு, சத்தமே செய்யாமல், சந்தோஷமாக, என்னிடம் எதையுமே எதிர்பார்க்காமல் அவர் செய்த அத்தனை செயல்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்கு, எனக்கும் அவருக்குமேயான பிரத்தியேகமான தருணங்களில் சந்தோஷமாக சிரித்துக்கொண்டு இருப்பதற்கு,

விளிம்பின் வெளியில்

பத்து நாளைக்கு முன்னால ஒரு மாலுக்குப் போயிருந்தேன். அங்க ஒரு அழகான பொண்ணு வெண்ணிற கலர்ல ஃப்ராக் மாதிரி ஒரு ட்ரெஸ்ல அசத்தலா இருந்தா! யாருக்காகவோ காத்துக்கிட்டிருந்தா. உங்களுக்கு மர்லின்மன்ரோ படத்துல வந்த, செவென் இயர்ஸ் இட்ச்னு நினைக்கிறேன், பிரசித்தமான அந்த வெள்ளை  கலர் ஃப்ராக் காட்சி நினைவிருக்கா? அந்த மாதிரி இப்ப நடந்தா எப்பிடி இருக்கும்னு நினைச்சேன்!  அதே மாதிரி  அந்த டிரஸ் காத்துல பறக்கற மாதிரி  பறக்க ஆரம்பிச்சது. அவ தன்னோட டிரஸ்ஸை தன் கைகளால் கட்டுப்படுத்த முயன்றாள். முடியலை.

நீர்வழிப் படூஉம் புணைபோல்……

இப்போது  எழுபத்தைந்து வயதான சௌமித்ரா தன் தொழிலிருந்தும் ஓய்வு பெற்று, கல்கத்தாவின்  மேல்தட்டு வர்க்கத்தினர் வசிக்கும் ஆடம்பரமான,  அழகான, அமைதியான குடியிருப்புப் பகுதியில் அழகிய தோட்டத்துடன் கூடிய ஒரு பங்களாவில் ஒரு வேலைக்காரனுடன் தனியே வசித்து வருகிறார். அவருக்கு இருக்கும் சொற்பமான நண்பர்களுடன் மாலை நடைக்குப் போவது, பாட்மின்டன் விளையாடுவது, அவருடைய அற்புதமான பாடல் சேகரத்திலிருந்து ஹிந்துஸ்தானி சங்கீதம், ரபீந்த்ர சங்கீதம், மேலை இசை இவைகளைக் கேட்பது, செஸ் விளையாடுவது என்று  அவரின் நாட்கள் கழிகின்றன. அவர்கள் யாருக்கும் கூட இவர் நாற்பந்தைந்து ஐம்பது வருடங்களுக்கு முன்னால் சினிமாவில் நடித்திருக்கிறார் என்று தெரியாது. 

அணங்கு கொல்?

அதில் அந்த பெண் கொஞ்சம் பெரியவளாக இருபதுகளின் இறுதியில் இருப்பவள் போல இருந்தாள். அவளும் மராத்திக்கட்டு புடவை கட்டிக்கொண்டிருந்தாள்.கூட இரண்டு பெண்ணும் ஒரு ஆணுமாக குழந்தைகள்.” வாம்மா! வாங்கோடா கண்களா!” குழந்தைகளை அணைத்துக்கொண்டு ஆயி கேட்டாள் “என்னடி பார்வதி! உங்க மடிசார் கட்டிக்காமல் நம்ம கட்டு கட்டிண்டு இருக்கே ”

பகடை ஆட்டம்

“ஒரே மாதிரி ஏழு பேர் உலகத்தில் இருப்பார்கள் என்று சொல்லுவார்கள் அல்லவா?அந்த மாதிரி எனக்குத் தெரிந்த ஏதோ முகத்தை நினைவு படுத்துகிற  ஏழு பேரில் ஒருவரோ என்னவோ நீங்கள்? “ சிரித்துக்கொண்டே சொன்னவள் தொடர்ந்தாள்.

இரு புறமும் சுழலும் கடிகாரங்கள்

“புரியறதும்மா! வாழ்க்கையில எந்த முடிவையுமே நான் சரியா எடுத்ததில்லை! ஐ வாஸ் அ டோடல் ஃபைலியர்!”
…அவளுக்கு மனசுக்கு கஷ்டமாக இருந்த்து.
“சாரிப்பா! ரொம்ப சாரிப்பா! நான் அந்த அர்த்தத்துல சொல்லலப்பா!”

கழுத்து நீண்டு வாய் குறுகிய பாட்டிலுக்குள் ஒரு காடு

ஜன்னலுக்கு வெளியே  வெகுதூரத்தில் தெரிந்த பொட்டல் வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பொட்டல் வெளி மௌனமாய் அசைவது தெரியாமல் மெதுவாக அசைந்துகொண்டிருந்தது ; மின் கம்பங்கள் கத்திக்கொண்டே வேகமாக பின்னோக்கி  ஓடின.   அவள் அருகில் அமர்ந்திருந்த ராம்  அவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு அவனுக்கு அந்தப்பக்கத்தில் உட்கார்ந்திருந்த  மன்னியிடம் அவன் ட்ரேட் மார்க் “கழுத்து நீண்டு வாய் குறுகிய பாட்டிலுக்குள் ஒரு காடு”

போர்வை

“சேப்பா இருக்கா இல்லை?” என்றான் அண்ணா.
“ஆமா! கிழிச்சா! வாயைத் திறந்தா அசடு வழியறது”
“நீ சொல்றது சரியா , தப்பான்னு நான் டிஸைட் பண்றேன்”
“உன் கிட்ட சொன்னேன் பாரு! நீ என்ன பெரிய ஜட்ஜா, தீர்ப்பு சொல்றதுக்கு”
அடித்தொண்டையில் இவ்வளவும் சொல்லி முடிப்பதற்குள் அவள் வந்தாள்.
“உனக்கு ஒரு அண்ணாவும், தம்பியும்னயே? ரண்டு பேரும் தம்பி மாதிரி இருக்காளே?”
அண்ணாவை சரியாக அவனுடைய பலவீனமான இடத்தில் தாக்கிவிட்டாள். அந்த ஒரு வார்த்தையில் அவனுடைய பரம எதிரியாகி விட்டாள்! எனக்கு சந்தோஷமாக இருந்தது!

மொழி

சாப்பாடுக்கு ஃபுட் எனத்தெரிந்தது. அதை எப்படி வார்த்தையாக சொல்வது என யோசித்தாள். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து தன் கையைக் குவித்து வாய்க்கு அருகில் இரண்டு , மூன்று முறை கொண்டுபோய் ஆயிற்றா என்ற பாவனையில் தலையை ஆட்டினாள்.

தெளிவு

மாமியின் பேச்சில் பொதுவாக ஒரு ஐம்பதைந்து வயதான , மேல் மத்திய தரக் குடும்பப் பெண்மணியிடம் நாம் எதிர்பார்க்கிற மனமுதிர்ச்சி, பக்குவம், நிதானம் இவை எதுவும் இருப்பதில்லை. மனதில் தோன்றியதை தோன்றியவுடன் பேசுகிற சுதந்திரமான, விளையாட்டுத்தனமான மனநிலையில் இருப்பவர்போலத்தான் அவர் பேசுகிறபோது தோன்றும். சில சமயம் அவரின் கேள்விகள் இருட்டு அறைக்குள் , தெருவில் வருகிற காரின் தலை விளக்கு வெளிச்சம் ஒரு க்ஷணம் சடக்கென்று எதிர்பாராத வெளிச்சத்தைத் தருவது போல இருக்கும்.

அன்னியன்

எல்லாருடைய கண்களும் அந்த குழந்தையின் மேல்தான். அழகும்ஆனந்தமும் வடிவெடுத்ததுபோல் இருக்கிறது அந்த குழந்தை. அந்த கொழு கொழு கன்னத்தை, கைகளை தொடையை முத்தமிட வேண்டும் போல் இருக்கிறது. பெரிய மூக்கும் , தலையில் காந்தி குல்லாவுமாக இருக்கிற மராட்டி கிழவர் மேல் உட்கார்ந்து கொண்டு அவர் பெரிய மூக்கை கிள்ளுகிறது, அதை தடுத்தால் குல்லாயை உருவுகிறது. பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற மராட்டி கட்டு புடவை கட்டிக்கொண்டு கத்திரிப்பூ நிறத்தில் பெரிய குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டிருக்கிற கிழவிக்கு ஒரே பெருமை. அது அவள் பார்வையிலேயே தெரிகிறது. கி ழவரிடம் இருந்து குழந்தை கிழவியிடம் தாவி அவள் குங்குமப் பொட்டை நோண்டுகிறது. கிழவி சிரித்துகொண்டே “விஷமக்காரன்! எப்படி படுத்துகிறான் பாருங்கள்”

லீலாவதியைத் திருப்பி அனுப்புவது எப்படி?

ப்ரொஃபஸர் “அட அது இல்லப்பா! பாஸ்கராச்சார்யா கேள்விப்பட்டுருக்கயா?”என்றார்….
ப்ரொஃபஸர் ,”இல்லப்பா , கணக்குல பெரிய மேதை, பல புத்தகங்கள் எழுதியிருக்கார். கி.பி 1100கள்ள வாழ்ந்தவர். அல்ஜீப்ரா, தசம கணிதம், கால்குலஸ், ட்ரிக்னொமெட்ரி இதுல எல்லாம் புஸ்தகம் எழுதி இருக்கார்.
அப்புறம் பெல் ஈக்வேஷன்தெரியுமா? X2 =1+PY2. அதை சால்வ் பண்ணியிருக்கார். இருபடி சமன்பாடுன்னு சொல்லப்படற க்வாடராடிக் ஈக்வேஷன்ல எத்தனையோ பண்ணியிருக்கார். π மதிப்பைக் கண்டிபிடிச்சுருக்கார். அவரோட சித்தாந்த சிரோமணிங்கிற மஹாபெரிய புத்தகத்தில நாலு பாகங்களான பீஜ கணிதம், க்ரஹ கணிதம், கோலத்யாயா, லீலாவதி இதெல்லாம் ரொம்ப புகழ் பெற்றவை. பல மொழிகள்ல மொழி பெயர்ந்திருங்காங்க,” கொஞ்சம் மூக்சு விட்டார். தலை கலைந்து, கண்ணாடிக்குப் பின்னால் கண் பெரிதாக இருந்தார்.

எங்கெங்கு காணினும்…

ஷாரன் குழந்தைகளுடனும், அவளின் அன்பான கணவனுடனும் இந்தியா வந்தாள். அங்கு ‘கண்ணூஞ்சல் ஆடினாள் காஞ்சன மாலை”என்று மாமிகள் பாட ஊஞ்சல் ஆடினாள், மடிசார் புடவையில் திருமாங்கல்யம் கட்டிக் கொண்டாள்.மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குப் போய் குங்குமம் வாங்கி தாலியில் வைத்துக் கொண்டு கண்ணை மூடி சாமி கும்பிட்டாள்.

ஆறாம் திணை

கூட்டம் நெரிபடுகிற நியூயார்க் நகர சப் வே நிலையங்கள் வாழ்க! ஓடிக் கொண்டே சட்டையைக் கழற்றி டீ ஷர்ட்டுக்குள்ளே திணித்துக் கொண்டான். அவர்கள் எலிவேட்டரின் மேல் பகுதியில் தென்படுவதற்குள் ஒளிய வேண்டும், எங்கே? எங்கே? பதறியபடி இடப் புற கடைகளை நோட்டம் விட்டுக் கொண்டே ஓடினான். மூன்றாவது, நான்காவது கடைகளுக்கு நடுவே இருந்த இருட்டான ஒரு அடி இடைவெளியை மறைத்த மரப் பலகையைத் தொட்டான். ஸ்பிரிங்க் வைத்தது போல  வழுக்கிக் கொண்டு திறந்தது. இவன் உள்ளே நுழைந்து இடைவெளி தெரியாமல் மூடிக் கொண்டான்.பலகையில் இருந்த சின்ன ஒட்டை வழியாக அவர்கள் எலிவேட்டரின் மேல் பகுதியில் நின்று கொண்டு சுற்றும், முற்றும் தேடுவதைக் கவனித்தான். பயமாக இருந்தது,

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் ….

“இப்ப ஏதேதோ காரணங்களினால அந்த ஊர் பேரைச் சொல்றதுக்கே தயங்கறா மாதிரி ஆயிடிச்சு பாருங்க! அந்த கோவில் அழகு ஒண்ணு போதுமே! என்னோட ஒண்ணு விட்ட சித்தி ஒத்தங்க அந்தஊர்ல இருந்தாங்க! அவங்க பேரு பொன்னம்மா.பாக்க தங்கம் மாதிரி ஜொலிப்பா! நல்ல சேப்பு! அதான் அந்த பேரு வச்சாங்க போலிருக்கு!அவங்க கல்யாணத்துக்கு நான் போயிருந்தேன்.எனக்கு அப்போ ஆறு , ஏழு வயசிருக்கும்…..என் பக்கத்துல இருந்த ஒரு பாட்டி, இன்னொரு மாமிகிட்ட சொல்லிண்டு இருந்தா ‘இதென்னடி இது அட்சதையும் எள்ளையும் கலந்தாப்பல இருக்கே’ன்னா

கடந்து போனவர்கள்

அவனை நாங்கள் சந்தித்த அந்த அற்புதமான கோடை காலம், ஊஞ்சலின் கீரீச்சிடலாய், முற்றத்தில் வரைந்த கரிக் கோட்டு கிரிக்கெட் ஸ்டம்ப்பாய்,, நாடகத்தில் முதுகில் தொங்க விட்டுக் கொண்ட பழைய வேட்டியாய், ஆற்றங்கரையில் விளையாடிய எறி பந்தாய், கொல்லைக் கிணற்றின் பொந்திலிருந்து பறக்கும் , நீல வண்ண மீன் கொத்தியின் லாகவமான பறத்தலாய், உச்சி வெயில் வேளையின் கழுகின் கத்தலாய் விரிந்து பெருகியது.

லோக மாயை!

எலிவேடரிலிருந்து வெளியில் வரும் பொழுது பார்த்தாள், அந்த ரஷ்ய மூதாட்டி, கட்டிடத்தின் முன் கதவைத் திறந்து கொண்டு வெளியே போய்க் கொண்டிருந்தாள்.மேகா ஓட்டமும் நடையுமாக முன் கதவை அடைந்தாள்.

மிகச் சரியாக அதே நேரத்தில் கீழ் தளத்தைச் சேர்ந்த ஏதொ வீட்டிலிருந்து ஒரு இளம் தாய், தன் இரண்டு வயது குழந்தையுடனும், அதன் மூன்று சக்கர வண்டியுடனும்,அந்த கனமான கதவுடன் போராடிக் கொண்டிருந்தாள். இவள் கதவைப் பிடித்துக் கொண்டாள், பார்வை வெளியை விட்டு அகலவில்லை. அம்மா சைகிளுடன் வெளியே போனாள், நன்றியுடனும்,புன்னகையுடனும். அந்த குழந்தை உள்ளேயே நின்று கொண்டு வெளியே போக மறுத்தது. அம்மா,அதை வெளியே வரச் சொல்லி மென்மையாக சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த மூதாட்டி, கட்டிட முகப்பிற்கும், நுழைவாயிலுக்கும் இடையில் இருக்கும் இருபது அடி தூரத்தில் பாதியை கடந்து விட்டிருந்தாள்.

கலையும், இயலும்

நாங்கள் அப்போது குடியிருந்த வாடகை வீடு ரொம்ப வாகான ஒரு இடத்தில் இருந்தது. கடை,கண்ணி, பள்ளி, அப்பாவின் அலுவலகம் எல்லாம் பக்கத்தில் இருந்ததைத் தவிர இன்னுமொரு பெரிய சாதகமான விஷயம் ஒன்று இருந்தது. அதாவது வீட்டுக்குள்ளிருந்தவாறே , வெளியில் நடக்கிற வித விதமான, சுவாரசியமான நிகழ்வுகளைப் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் ஏதுவாக தெருவின் முனையில், நாலு தெருவும் கூடுகிற இடத்தைப் பார்த்தாற் போல் இருந்தது. அங்கே, அரசியல் கட்சிக் கூட்டங்கள், பாவிகளை அழைத்து ரட்சிக்கிற கூட்டங்கள், கம்பி மேல் நடக்கிற கழைக்கூத்தாடி வித்தைகள், அப்புறம் எங்கள் தெருவில் கொஞ்சம் பிரபலமாக இருந்த ஒரு பையனின் சினிமா பாட்டுக்கான நடன நிகழ்ச்சிகள் …

மற்றும் அவர்கள்

எதையெல்லாமோ நினைத்துக் கொண்டே வந்ததில், சீக்கிரம் கால்வாய்க்கரையோரம் படகு வீடுகளுக்கு அருகில் வந்து விட்டாற் போல் தோன்றியது.யார், யாருடைய வீடுகளையெல்லாமோ, இப்படி உற்று உற்றுப் பார்த்துக் கொண்டே போகிறோமே, இது கொஞ்சம் அநாகரீகமோ என்று தோன்றினாலும், இந்த படகு வீடுகளைப் பார்ப்பதில் உள்ள புதுமை எனக்குப் பிடித்திருக்கிறதே என்ன செய்ய என்று சொல்லிக் கொண்டாள். தவிர, அவர்கள் யாரும் இதைக் கவனிப்பதுமில்லையே என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள். ஒரு படகு வீட்டின் ஜன்னல் வழியாக சாப்பாட்டு அறை தெரிந்தது. குட்டி சாப்பாட்டு மேஜை மேல் அழகிய வண்ணப் பூங்கொத்து.

முப்பாலுக்கு அப்பால்

பின்னால் கொல்லையில் காவேரி ஒடுகிற சல சல சத்தம், தோட்டத்து மரங்களில், கிளைகளும் இலைகளும் உரசுகிற சத்தம், சிள் வண்டுகளின் ரீங்கார சத்தம், எங்கோ தெருவில் போகிற வண்டி மாடுகளின் கழுத்து மணிகளின் சத்தம், கூடை அடைய தாமதமான ஒற்றைப் பறவையின் சத்தம், தூரத்து மெயின் ரோடில் லாரி போகிற சத்தம், ஆசிரம இரும்பு கேட்டில் கட்டியிருக்கிற தகரம் காற்றில் ஆடும் சத்தம், சமையலறையில் பாத்திரங்களின் ஜலதரங்க சத்தம் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டிருக்கையில் இப்பிடியே இருந்து விட்டால் என்ன என்று தோன்றியது.

நிறப்பிரிகை

உண்மையில் அது வரையில் அந்தப் பெண்ணோ, என் வகுப்பில் வேறு யாருமோ என்ன ஜாதி என்ற கேள்வி ஒரு போதும் என் மனதில் வந்ததேயில்லை. ஜாதிகள் பல உண்டு என்பது தெரியும். ஒவ்வொருவரும் பேசுகிற மொழிக் கொச்சையும், சாப்பிடுகிற சாப்பாட்டின் ருசியும், பழக்க வழக்கங்களும் வேறு வேறு என்று தெரிந்ததே தவிர, அதனால் மனிதர்களை வேறு வேறு மாதிரி நடத்த வேண்டும் என்றோ, நினைக்கவேண்டும் என்றோ தோன்றியதேயில்லை.

எங்களுக்கு ஒரு பெரியப்பா இருந்தார்

பெரியப்பா என்றால் அப்பாவின் சித்தப்பா பையன். அவர் நாங்கள் வசித்த நகரத்திலிருந்து 10,15 மைல் தூரத்தில் இருந்த ஒரு சின்னக் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் ஓவிய ஆசிரியராக இருந்தார். அனேகமாக, எல்லா வாரங்களிலும் சனிக்கிழமையோ ஞாயிற்றுக்கிழமையோ எங்கள் வீட்டிற்கு வருவார். அவர் எத்தனை முறை வந்தாலும், எத்தனை அடிக்கடி வந்தாலும் அவரது வருகை எங்களுக்கெல்லாம் ஒரு உல்லாசத்தையும், விடுதலை உணர்ச்சியையும், சொல்லவொண்ணா சந்தோஷத்தையும் ஒவ்வொரு முறையும் அளித்தது. இத்தனைக்கும் அவர் எங்களுக்கு ஒரு ஆரஞ்சு மிட்டாய் கூட வாங்கி வந்தது கிடையாது. அவருடைய பொருளாதார நிலை அப்படி. ஆனால் அது ஒரு பொருட்டாகவே தோன்றியதில்லை. அவர் எங்களுக்குச் சமமாக ஒரு சிறுவர் உலகத்தில் எப்பொழுதும் இருந்ததுதான் எங்களுக்கு அவர் மேல் இருந்த ப்ரியத்துக்கு காரணம் என்று தோன்றுகிறது.

காட்சிப் பிழை

“ சே!சே! பயப் படாதே! பயப்படாதே!! அப்பிடி எதுவும் மறக்காது! இதோ இப்ப தெரிஞ்சுடும்! ரிலாக்ஃஸ் ரிலாக்ஃஸ்!!” தனக்குத்தானே சொல்லிக் கொண்டு பயத்தைப் புறந்தள்ள முயன்றான்.
சாலையின் இடது புறம் கரும் பச்சையில் ராக்ஷ்ச வளர்த்தியில் நெற் பயிர்கள் ,நெடும்தூரம் வரை.