வெங்காயக் கண்ணீர்

இன்று பாரத மணித் திருநாட்டின் பெருந்துன்பம் என்பது மரணம் ஏற்படுத்தும் டெங்கு முதலாய நோய்கள் அல்ல, ஓராண்டில் இரயில்வே லெவல் கிராசிங்குகளில் எண்ணூறு பேர் செத்துப் போனதல்ல. பல லட்சம் கோடிப் பணம் அரசு வங்கிகளில் வாராக்கடனாக இழந்து நிற்பதல்ல. கொலை, கொள்ளை, கள்ளநோட்டு, ஆள் கடத்தல், வன்புணர்வுத் தீனங்கள் அல்ல. காசு வாங்கி வாக்களிப்பதல்ல. சாதி அரசியல் அல்ல. …..அவற்றைவிட எல்லாம் பெரிய இனமானச் சிக்கல் – வெங்காய விலை உயர்வு.