பய வியாபாரியா ஹிட்ச்காக்?

அவருடைய மிக விரிவான நினைவுகள்… எல்லாம் பயம் பற்றியவை. இந்த எரிபொருளை நம்பித்தான் அனைத்தையும் நசுக்கி ஓடும் ஹிட்ச்காக் வாகனம் ஓடியது. அவர் கிட்டத்தட்ட எதைப் பார்த்தாலும் தான் அச்சமடைவதாகச் சொல்லிக் கொண்டார்: பொலீஸ்காரர்கள், புது மனிதர்கள், காரோட்டுவது, தனிமை, கூட்டங்கள், உயரங்கள், தண்ணீர், மேலும் எந்த வகை மோதலும்.

பய வியாபாரியா ஹிட்ச்காக்?

ஆனால் நியாயமாகப் பார்த்தால், கேலிக்கு உள்ளாக்கும் சம்பவங்களை நோக்கினால் அவற்றிலிருந்து ஹிட்ச்காக் தன்னையும் விட்டு வைக்கவில்லை. ஹிட்ச்காக்கின் கோமாளித்தனம் பற்றி விளக்கம் தேடுவதானால், அது உலகம் அவரைக் கேலி செய்வதற்கு எதிரான ஒரு தற்காப்பு உத்தி என்று சொல்லலாம் என்கிறார் பான்வில். அவருக்குத் தன் பெரும் இடுப்பின் அளவு, உருண்டைத் தலை, மூன்று மடிப்புடன் தொங்கும் தாடை ஆகியன குறித்துச் சுயக் கூச்சம் நிறைய இருந்தது.