கொலகலூரி இனாக்

கட்டுப்பாட்டை இழக்கும் வயது. பைத்தியக்காரக் காதல். அந்த அழகி, உடல் நிறைய நகையணிந்து வீட்டை விட்டுக் கிளம்பினாள். தங்க ஒரு இடமில்லாத தனியான இளம்பெண். கணவனாக வேண்டிய ரங்காராவை நினைத்து வாடும் உதவியற்றவள். அவளோடு யாரோ சிநேகம் செய்தார்கள். ஆசை காட்டினார்கள். அந்த ‘யாரோ’ யாரென்று  யாருக்கும் தெரியாது. அவளையும் அனுபவித்து, நகைகளையும் திருடிக் கொண்டனர். ஆனால் அவள் மனத்தில் இருந்தது ரங்காராவ் மட்டுமே. அதனால் தன்னை ஏமாற்றி நகைகளைத் திருடியது ரங்காராவே என்று நம்பினாள். தன்னைக் கெடுத்தது ரங்காராவே என்று நினைத்தாள். அதையே இன்றும் கூறினாள்

கொடுத்துப் பெறுவதல்ல பெண்ணியம்

பெண்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் துணையாக, ஆண் இலக்கியவாதிகள் புயல்போல வேட்டியை இறுக்கிக் கட்டி களமிறங்கிய செயல் மகிழ்ச்சியை அளிக்கிறது. பரிதாபம் காட்டிச் சும்மா இருக்காமல் அவர்களின் துயரங்களைப் புரிந்து கொண்ட ஆண் எழுத்தாளர்களின் இலக்கிய செயல்பாடுகள் விரிவாக வெளிவந்தன. நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவை அளவிலும் இயல்பிலும் சிறிதாக இருந்தாலும் சமுதாயத்தில் பெரிய மாற்றங்களை எடுத்து வருகின்றன. சிந்தனையைத் தூண்டுகின்றன.  

சையது சலீம்

பெண்களுக்கு, அதிலும் முக்கியமாக முஸ்லிம் பெண்களுக்கிருக்கும் மற்றொரு பிரச்சினை கல்வியறிவு இன்மை. அது எத்தனை அனர்த்தங்களுக்கும்   விபரீதங்களுக்கும் வழி வகுக்கிறது என்பதைக் கூறி, முக்கியமாக அதன் மதிப்பை அறியாத முஸ்லிம் இளைய தலைமுறை ஏன் முன்னேறுவதில்லை என்பதையும் ‘சலீம்’ உதாரணங்களோடு விவரிக்கிறார். ஒரு பெண் கல்வியறிவு பெற்றால். அவள் மட்டுமே அல்ல அந்தக் குடும்பமும், அவளுடைய ஊரும் எத்தனனை பயன் பெறும் என்பதை ‘அன்வர்’ மூலம் நிரூபிக்கிறார் சலீம்

கவிஞர் பகவான், ஆசு பாபு ராஜேந்திர பிரசாத் & என்ட்லூரி சுதாகர்

இது ஒரு விதத்தில் விட்டுப் பிரிய முடியாத, உயிருக்கும் உயிருக்கும் இடையில் இருக்கும் நுட்பமான உறவுக்கு உயர்ந்த இடத்தைக் கொடுக்கும் கவிதை. ஒரு பெண் தன் வாழ்க்கைப் பயணத்தில் இவ்வாறு தன் வீட்டை விட்டு இன்னொருவர் வீட்டுக்குச் சென்று, அவர்களில் ஒருவராக மாறுவது என்பது உயிர் வாழ்வதற்காக மட்டுமே. அந்த வீட்டு மனிதர்களின் இயலாமை அவளுக்கு பற்றுக்கோடானது.

கே. சிவாரெட்டி

பெண்ணியம் தீவிரமான வடிவம் எடுப்பதற்கு முன்பாகவே கே. சிவாரெட்டி ஆணாதிக்கத்தை நிபந்தனையின்றி எதிர்த்து, பெண் சார்புடையவராக எழுதத் தொடங்கினார். “கைவிரல் குகை” (சேத்தி வேள்ள குஹ) என்று சிவாரெட்டி பயன்படுத்திய குறியீடு, திருமண அமைப்பு என்ற பெயரில் ஆண், பெண்ணை அடிமைப்படுத்தும் விதத்தைக் குறிக்கிறது.   

நவீன தெலுங்கு இலக்கியத்தில் பெண்ணியம் எழுதிய ஆண் எழுத்தாளர்கள் – பகுதி- 1

சில ஆண் எழுத்தாளர்கள், பெண்கள் எழுதிவரும் பெண்ணியக்  கருத்தியலோடு ஒன்றுபட்டு, பெண்களின் உணர்வுகளை மதித்து, பல படைப்புகளைச் செய்தனர். பெண்கள் மட்டுமே அன்றி அவர்களுக்குத் துணையாக ஆண் எழுத்தாளர்களும் தம் பங்கு உதவியை அனைவரும் ஏற்கும் விதமாக அளித்து வருகிறார்கள். அவற்றில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற அனைத்தும் உள்ளன.