பத்து வைரங்கள் – புத்தக விமர்சனம்

இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளும் சமூகத்தை விட்டு விட்டு அகத்தை மட்டுமே பேசவில்லை. மனிதர்கள், அவர்கள் வாழும் சமூகங்கள், குறிப்பாக பெண்கள், அவர்களுடைய பிரச்சனைகளைப் பற்றி விரிவாக பேசுகிறது. அதிகமான விவரணைகள் இல்லாவிட்டாலும் அது ஒரு குறையாக எங்கும் தெரியவில்லை. கதைகளுக்கு வலு சேர்க்கும் விதமாகத் தான் உள்ளது

தருணங்கள்

எப்போதுமே இந்த சாலை இந்த நேரத்தில் கூட்டம் அதிகம். வரிசையாக ஒன்று இரண்டு பெரிய பள்ளிக் கூடங்கள் உள்ளது. குழந்தைகள் வண்ண வண்ண சீருடைகள். மழை என்பதால் வானவில் போன்று எண்ண முடியாத வண்ணங்களில் மழை கோட்டுகள். பூக்கள் சிரித்து கொண்டே நகர்வது போன்று சிறுவர் சிறுமிகள் உற்சாகமாக பள்ளி வகுப்புகளை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றார்கள். ஊட்டியில் உள்ள ரோஜா தோட்ட கண்காட்சி போன்று இருந்தது. தமிழ் அனைவரையும் பார்த்து கொண்டே நகர்ந்து கொண்டு இருந்தாள்.

சோழன் கவிதைகள்

காரிகை
வேழாழி மணலில்
தன் பாதங்களை எடுத்து
தொட்டு தொட்டு
அலைகளிடம் சென்றாள்
கருமை நிறம் கொண்ட
மணிகள் நனைந்தன