இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளும் சமூகத்தை விட்டு விட்டு அகத்தை மட்டுமே பேசவில்லை. மனிதர்கள், அவர்கள் வாழும் சமூகங்கள், குறிப்பாக பெண்கள், அவர்களுடைய பிரச்சனைகளைப் பற்றி விரிவாக பேசுகிறது. அதிகமான விவரணைகள் இல்லாவிட்டாலும் அது ஒரு குறையாக எங்கும் தெரியவில்லை. கதைகளுக்கு வலு சேர்க்கும் விதமாகத் தான் உள்ளது
