உள்ளே
எங்கேயோ
இந்தப் பிரபஞ்சத்துக்குள்
ஒரு பேனா மூடி அளவேயான
குப்பி உள்ளது.
உள்ளதா?
கடல் கொண்டும் அதை
நிரப்ப முடிவதில்லை.
Tag: வ.ஸ்ரீநிவாசன்
திறப்பதற்குப் புதிய வாசல்கள்
‘புலிநகக் கொன்றை’ என்ற ஒரு சொற்றொடர் அல்லது சொல் ஓர் அற்புதம் எனில் ‘ஞாழல்’ – அதன் மூதாதையான செஞ்சொல் – இனிமையில், செழுமையில் அதை விஞ்சுகிறது. ‘ஞாழல் பிறந்த கதை’ கட்டுரை விடுதலைப் போராட்டம், சாதாரண மனிதர்களான சுதந்திரப் போராட்ட வீரர்கள், தென்கலை வைணவர்கள், பொதுவுடைமை இயக்கம், நாவலில் வரும் பாத்திரங்களின் வாழ்க்கை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்நாவல் எப்படிப் பிறந்தது என்று விவரிக்கிறது.
எட்டு கவிதைகள்
மேகம் மறைப்பதனால்
மேரு இல்லையென்றாகிடுமா?
காகம் கரைவதொன்றே
கானமழை என்றிடவோ?
கு. அழகிரிசாமி நூற்றாண்டு (23/9/1923 – 5/7/1970) – ஓர் எளிய மலர்ச்செண்டு
நாம் எப்போதும் இலக்குடனும், பெருமளவு இலக்கின்றியும் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டும், பதிந்து கொண்டும் இருக்கிறோம். அதில் கு. அழகிரிசாமி போன்ற தேர்ந்த எழுத்தாளர் அதன் எல்லா அம்சங்களையும் கூர்ந்து நோக்குகிறார். வாசகரோடு பகிர்கிறார். இதயத்தை நொறுங்க வைக்கும் தாங்கொணாத் துயரையும், நிராசையையும், சாமான்ய மனிதர்களுக்கு நிகழும் சாமான்ய சம்பவங்கள் மூலம் வாழ்வின் சாரத்தையும், அர்த்தத்தையும், அனர்த்தத்தையும், தினசரி வாழ்வில் தானாய் நிகழும் நகைச்சுவையையும் இவரது கதைகளில் நாம் காண்கிறோம்.
கல்லும் மண்ணும்
பாரத தேசத்தின் ஆன்மிகக் கலாச்சார ஊற்றுகளில் முக்கியமான ஒன்றான தமிழ் மண்ணின் மிகச் சாதாரண, பொருளாதாரம், அந்தஸ்து, அதிகாரம் முதலியவற்றில் கடைக் கோடிப் படியில்கூட இராத சாமானிய மக்களிடம் இந்த மண்ணின் ஆன்மிக தரிசனம் தத்துவ வார்த்தைகளாக மட்டுமன்றி, உண்மையான வாழ்வை வழிநடத்திச் செல்லும் உணர்வாகவும் இருந்த காலம் இக்கதை நிகழும் நேரம்.
