சொர்க்கத்தின் பறவைகள் – அப்துல்ரஸாக் குர்னா (தமிழில் லதா அருணாச்சலம்)

வரலாறும் தத்துவங்களும் ஒரு நாவலுக்கு தேவை. வரலாற்று பின்னணியும் தத்துவ விசாரணையும் வெளிப்படையாக தெரியாதபடி அமைந்த நாவலாக சொர்க்கத்தின் பறவைகள் நாவலை சொல்லலாம். எந்த இடத்திலும் நாவல் தனக்குரிய வரலாற்றை நேரடியாக‌ சொல்லவில்லை. எந்த தத்துவ தேடல்களும் அதற்கில்லை, ஆனால் அவை மிகச்சரியாக பின் தொடர்ந்தபடி இருக்கின்றன. நாவலில் உள்ளீடாக இருக்கும் வரலாறும் தத்துவத்தையும் வாசகன் அறியும் போது ஏற்படும் கிளர்ச்சிதான் நாவலை நடத்திச் செல்கிறது.