சினிமாவும் ஆண் பார்வையும்

முதலாவதாக ஊடகங்களின் ஆண்பார்வையில் பெண்கள் செயலற்ற,மந்தமான, உடமையான, பாலியல்  பொருளாகவே பயன் படுத்தப்படுகிறார்கள். இரண்டாவதாக பெண்கள் எவ்வாறு தம்மைத்தாமே பார்க்கிறார்கள் என்பதாகும். மூன்றாவதாக பெண்கள் மற்றைய பெண்களை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதாகும். பெண்களில் ஒரு பகுதியினர் ஆண்பார்வையில்  தங்களது செயலான்மையை விளங்கிக் கொண்டாலும், பெரும் பகுதியினர் ஆணாதிக்க ஆண்பார்வைக்கே பலியாகிப் போகிறார்கள். அப்பார்வையே இயல்பானது எனவும் நம்புகிறார்கள். அழகு, கவர்ச்சி என சில பெண்கள் தமது உடலமைப்பு குறித்து அதீத கவனம் செலுத்துவதைத் காணலாம். குறிப்பாக இளம் வயதினரின் தமது உணவை தவிர்த்து உடல் எடையை குறைப்பார்கள். முழு கவனமும்  உடலின் எடை, அளவு (shape and size) என்பதாகவே இருக்கும். இறுதியில் உடல்நலத்திற்கு அவசியமான கலோரியினை இழப்பதினால் கனியுப்புகள், விற்றமின்கள் குறைபாடும் ஈமோகுளோபின் குறைபாடும் ஏற்பட்டு நோயாளியாகிறார்கள். இதனை eating disorder என்று அழைப்பர். இது ஆணாதிக்க கருத்தாக்கத்தின் பின்புலத்தில் உருவாக்கப்படும் ஆண்பார்வையை ஏற்றுக்கொண்ட பெண்களின் விழிப்புணர்வின்மை அல்லது அறியாமை என்பதுடன் மனநிலை பாதிப்பிற்கே இட்டுச் செல்கிறது எனலாம்.

பெண்களும் கற்புப் பூட்டும்

கற்புபெல்ட் என்பது உலோகத்தினால் ஆன உள்ளாடையாகும். பெண்களது பாலியல் உறுப்பான யோனியை மறைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதற்கு பூட்டும் சாவியும் உள்ளது. இது பல்வேறு வடிவங்களில் உள்ளது. அவற்றில் சில சிறுநீர், மலம் கழிப்பதற்கு ஏற்பவும் வடிவமைத்துள்ளது. இவை வரலாற்றின் இடைக்காலத்தில் பெண்களின் பாலியல் ஒழுக்கத்தை பாதுகாக்க பயன்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பெல்ட் அணிந்த பெண்கள் தங்கள் கணவரின் அனுமதியின்றி உடலுறவு கொள்ள முடியாது.

அம்பையின் சிறுகதைகள்

‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ தொகுப்பில் இந்த ஆணாதிக்க எதிர்ப்பு, ரசனையற்ற ஆண்களைச் சித்தரித்து உவகை கொள்ளும் போக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டு,பாம்பு தன் சட்டையை உரிப்பது போல் உரித்துக் கொண்டு வெளியே வந்துவிடுகிறார் அம்பை.பொதுவாக எந்த எழுத்தாளரும் செல்ல விரும்பாத பகுதி இது. ஒரே மாதிரி எழுதினால் தான் ‘இமேஜ்’ அடிபடாமல் இருக்கும், சுந்தர ராமசாமி,எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற வெகு சிலரே தங்களை அடிக்கடிச் சட்டையுரித்துக் கொள்பவர்கள். இந்தச் சட்டையுரிப்பில், தனது பழைய இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல்,அம்பையும் இறங்கியுள்ளது பாராட்டுதலுக்குரியது. ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ கதைகள் எல்லாமே …

கவிதைகளில் ஆண்பார்வை

நிச்சயம் போய் விட்டிருக்கும்: இல்லை
நிச்சயம் இருக்கும்: ஈ போய்விட்டிருக்கும்