இந்திய கிராமங்களின் முகம் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளது அல்லது சிதைந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டியுள்ளது. அவற்றின் பயண இலக்கு மாற்றம் பெற்றுள்ளது. நகரங்களைப் போன்று அபரீத நுகர்வு கலாச்சாரத்தில் கிராமங்களும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. நகரங்களைப் போன்று, பெருவணிக நிறுவனங்களின் கழுகுப் பார்வைக்குள் கிராமங்களும் இன்று வீழ்ந்து கிடக்கின்றன.
Tag: மஹாத்மா காந்தி
லீலாதேவி
அன்று காவேரியைப் பார்த்த போது கங்கையைத்தான் நினைத்துக்கொண்டேன். கங்கையோடு ஒப்பிடுகையில் மிகவும் சிறியது ஆனால் நீர்தானல்லவா ? பாரத தேசத்தில் ஓடும் நீரெல்லாம் கங்கைதானே. நீர் அமைதியாய் நடப்பது- கங்கை காவேரி எதுவாகட்டும் – மனம் குளிர்ந்து நிறைந்துவிடுகிறது. ஆனால் ஆச்சர்யம், எப்படி கங்கையில் எங்களுக்கு இருந்த அதே வரவேற்பு இங்கு காவேரியிலும். எனக்கு தமிழ்நாட்டை நினைத்தாலே நினைவில் முகங்கள்தான் எழுகின்றன. அவ்வளவு முகங்கள். மணிக்கணக்காகக் காத்திருந்து, குழுமி, தொட முயன்று ஆசீர்வதிக்கச் சொல்லி எத்தனை முகங்கள். மனித வெள்ளம்தான் மனதில் எழுகிறது காவேரியை மீறி தமிழ்நாட்டை நினைத்தாலே.
