நினைவு தெரியும் முன்பே தாயையும், தந்தையையும் இழந்த, மாமாவால் வெறுமென வளர்க்கப்பட்டு, ஆசிரம இல்லத்தில் தங்கி தன்னை தகவமைத்துக் கொண்ட ஆனந்த் என்கிற ஒரு தனியனின் கதை மட்டுமல்ல. அவனின் மனசஞ்சலங்கள், ஆர்வங்கள், ஆர்வமின்மைகள், லாகிரி, காதல், காமம் என அனைத்தையும் மிக அழகாக நேர்த்தியாக blend செய்து கவனமாக நெய்யப்பட்ட ஓர் அழகிய தூய்மையான கம்பளம் என்று சொல்லலாம்.
Tag: தமிழ் இலக்கிய உலகம்
பூட்டிய வீடு
அந்தப் பையன் கவனம் சிதறிய ஒரு கணத்தைத் தேர்ந்தெடுத்து எழுந்து சரேலென்று கதவை நோக்கி ஓடினாள். அவள் கை தாழ்ப்பாளைத் தொட்டு இழுப்பதற்குள் அந்தப் பையன் சுதாரித்து விட்டிருந்தான். அவளைத் தடுத்து அவள் முடியைப் பிடித்திழுத்து தரையில் தள்ளிவிட்டான். அவள் முகம் சுவரில் மோதி நிலை தடுமாறிக் கீழே விழுந்தாள். ‘அம்மா..’
2000க்கு பின் தமிழ் இலக்கிய உலகம்
2000க்கு பின்னான தமிழ் இலக்கிய விரிவிற்கு இணையத்தின் பெருக்கமும், அச்சு ஊடகத்தின் எளிமையாக்கமும் முக்கிய காரணங்களாக சொல்ல வேண்டும். இணையத்தின் வாயிலாக வாசிப்பின் எல்லை விரிவடைந்தது. வாசகர்களின் நெருக்கம் அதிகமாக, விவாதங்களும் அதிகரித்தன. எல்லா முக்கிய சிறுகதைகதைகளும், சிறுகதையின் சூட்சமங்கள் எளிதாக வாசிப்பாளர்களிடமும் சென்று சேர்ந்தன. புதுமைப்பித்தன் மீண்டும் மறுவாசிப்பு உள்ளானார்.
