கிரிஸ்ஸோபதேசம்

முதலீடுகளில்  பலவகை  உண்டு.  அந்த காலம் மாதிரி  மனைவியின் தாலியை  அடகு வைத்து, உனது கார்  கொட்டகையில் புத்தொழில்  தொடங்க முடியும். சில சமயம்  அது வெற்றி பெற்று ஒரு கோடி ஈட்டி ஒற்றைக் கொம்பு (unicorn) நிறுவனமாக வளரலாம்.  இல்லாவிடில்  மக்களிடம் முறையிட்டு கூட்ட நிதி சேர்க்கலாம். அடுத்த வழி  தேவதை முதலீட்டார்களை (angel  investors ) முதல் சுற்று முதலீடு கேட்பது.  பெரிய தொகையானால் முதலீட்டார்கள் கூட்டமைப்பை (syndicate )  அணுகலாம். அந்த மாதிரி பல கூட்டமைப்புகள் குழுமத்துக்கு நான்  தலைவன்.