உலகின் பல நாடுகளில் ஒரு நாளைக்கு $2க்கும் குறைவான பணத்தில் வாழும் ஏழை மக்கள், மாத அல்லது வார சம்பளம் பெறுபவர்கள் இல்லை. அவர்கள் வருமானம் நாளுக்கு நாள் நிறைய வேறுபடுகிறது. நுண்கடன் அமைப்புகளால் அவர்கள் வருவாயை சீராக்க முடிந்தால் அதுவே அவர்களுக்கு பெரிய உபகாரமாக இருக்கும். அவர்களுக்கு நூறு ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, கட்டணங்களுடன் நூற்றி நாற்பது ரூபாயை திருப்பி கொடுத்தே ஆக வேண்டும் என்று அவர்கள் கழுத்தில் கை வைப்பதை விட, அத்தகைய சீரான வருவாய் நிலையை அடைய சேமிக்க உதவுதல், காப்புறுதி வழங்குதல் போன்ற உதவிகள் பன்மடங்கு பலனைத் தரும் என்கிறார் ரூட்மேன்.