தாத்தா தான் அவனுக்கு அப்பா. அவன் டிஎன்ஏயில் பாதி பங்கைக் கொடுத்து, நிகில் என்ற பெயரையும் வைத்தவர் அவனுடைய முதல் பிறந்தநாளுக்கு முன்பே சாலை விபத்துகளில் இறந்தவர்கள் கணக்கில் சேர்ந்துவிட்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து அவன் அம்மா மீளவில்லை. அவள் மன ஆறுதலுக்கு பரதநாட்டியப் பள்ளி. வீட்டின் தரைத்தளத்தில் இருந்து வரும் சலங்கையோசைக்கு நிகில் பழகிவிட்டான். தேர்வுகளுக்குத் தயார்செய்யும்போது கூட அது இடையூறாக இருந்தது இல்லை.
Series: ஆத்தோரம் மணலெடுத்து
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி
இளம் வயதில் அழகும் அறிவும் நிறைந்த ஒருத்தியின் மேல் பையன்களுக்கு மோகம் வருவது இயற்கை. காலப்போக்கில் அழகின் தாக்கம் குறைந்து அறிவின் உயர்ச்சி மட்டுமே தங்கும். அப்போது ஆசைக்கு பதில் பிரமிப்பு. நிகிலுக்கும் விரைவில் அந்த மாற்றம் நிகழும். திரும்பிப் பார்க்கும்போது, ‘சே! என்ன அசட்டுத்தனம்!’ என்று நினைக்கத் தோன்றும். வெட்கப்பட ஒன்றும் இல்லை. உடல் மற்றும் மன வளர்ச்சியில் ஒரு பாலம்.
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பணத்தை முடக்க அடுக்கு வீடுகள், வசதியான உள்நாட்டுக் குடும்பங்களின் உல்லாசப் பொழுதுகளுக்கு கடற்கரை இல்லங்கள், மலையடிவாரக் குடில்கள் – இவற்றில் முதலீடு செய்வதால் குடியிருப்புக் கணக்கில் ஆபத்து குறைவு. அதன் மதிப்பும் வேகமாக வளராது. உங்கள் தேவைக்கு வணிகக் கட்டடங்களுக்கான அக்கௌன்ட். எங்கள் மேற்பார்வையின் கீழ் நாடு முழுவதிலும் எண்ணற்ற வர்த்தக அமைப்புகள்
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி
ஆரம்பத்தில் இருந்த மோகம் குறைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அவள் பேச்சு வரும்போதெல்லாம் அவன் முகம் சாதாரணமாக இருக்கிறது. அதில் ஆச்சரியம் இல்லை. அவள் கடைக்கண்ணில் பார்த்து மோகிக்கும் அழகி இல்லை, நேருக்குநேர் பார்க்கும் மதிப்புக்குரிய வழிகாட்டி. கூடத்தின் ஒரு பக்கம் அவள் தன் வேலையைக் கவனிக்க இன்னொரு மூலையில் இவன் சோதனைகள் செய்திருக்கப் போகிறான்.
