ஊடாடும் பெருநிழல்

பதற்றத்துடன் என்னை இடுப்பில் தூக்கிக் கொண்டும் என் சகோதரனை இழுத்துக்கொண்டும்  பின்வாசல் வழியாகத் தப்பித்து ஓடிய சந்தர்ப்பத்தில் பெப்பியைத் தாக்கி இழுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். கடைசி வரை அவருக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை என்று சொன்னார் பப்பாஜி.  உங்கள் வீட்டில் பதுங்கியவாறு பெப்பி அணிந்திருந்த ஆடையின் நிறம்,   அடையாளங்களையும் கூறி அவளைத் தேடச்சொல்லி உங்களிடம் சொன்னாராம். உங்களாலும் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

சிலிர்ப்பு

“ஹராம் ஜாதோ…   எவனோ இடித்து விட்டு ஓடி விட்டான். இந்தப் பையன்தான் என்னைப் பத்திரமாக இங்கே கூட்டி வந்தான். இவனைப் போய் அடிக்கிறீர்களே… முட்டாள்களே… நகருங்கடா என்று எல்லோரையும் விலக்கி விட்டார். அவர் அருகில்  வந்து நின்றதை உணர்ந்ததும் அந்த ஆஜானுபாகர்கள் எல்லோரும் இவனை மறந்து நெகிழ்ச்சியுடன் பாபுஜி என்று பெரியவரைக் கட்டிக் கொண்டனர். 

கர்மவீரன் நாகுவும் கத்தேமார் மாங்காய் மூட்டையும்

ஒருவேளை தூரத்தில் இருந்து ஆண் ஜாடையாகத் தெரிந்தாலும் அந்தப் பெண் கிட்டப்பார்வையில் சுமாரான அழகாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நம்புவதற்கு முயற்சித்தான். சரி போய்த்தான் பார்ப்போம். யார் கண்டது? எது எப்படிப் போனாலும் சங்கரன் மாமா ஜனாதிபதி மாளிகையில் நல்ல செல்வாக்கோடு திகழ்ந்து அதனால் தனக்கு அலுவலக ரீதியாக ஏதேனும் நல்ல வாய்ப்பும் சவுகரியங்களும் கிடைக்கலாமே என்றும் நினைத்தான்.

குவாரண்டீன்

உயரத்தில் தீச்சுவாலைகள் மாலை நேரத்தின் ஆரஞ்சு நிறம் கலந்த அடிவானத்துடன் கலக்கும் போது, இன்னும் அரைகுறை உயிருடன் இருந்த நோயாளிகள், ஏதோ உலகமே தீப்பற்றி எரிகிறதோ என்று நினைத்தார்கள். குவாரண்டீன் இப்படி மேலும் பல மரணங்களுக்குக் காரணமாக இருந்தது. ஏனென்றால் வலுக்கட்டாயமாக குவாரண்டீன் மையத்தில் அடைக்கப்படும் அச்சத்தினால் மக்கள்  தங்கள் நோயின் அறிகுறியை யாருக்கும் சொல்லாமல் மறைக்கத் தொடங்கினார்கள்.

இறுதி சல்யூட்

தங்கள் கிராமத்தைப் பற்றியும், இருவரும் சேர்ந்து விளையாடிய குழந்தைப் பருவ விளையாட்டுக்கள் பற்றியும், பள்ளியில் பரிமாறிக் கொண்ட கதைகள் பற்றியும், 6/9 ஜாட் ரெஜிமெண்ட் பற்றி, அதன் தலைமை அதிகாரிகள் பற்றியும், விசித்திரமான பல நகரங்களில் அவர்கள் இருவரும் ஒன்றாகப் போய் உறவு கொள்ள நேர்ந்த விசித்திரமான பெண்கள் பற்றியும் பேசிக்கொண்டே இருந்தான். இடையில் கடுமையான வலியால் பேசுவதை நிறுத்தி உரக்கக் கதறினான்.