“லெகோ ரூமில்” ப்ளாக்குகளை அவர்கள் கலவரத்துடன் பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கையில் அங்கு ஒலித்துக் கொண்டிருந்த “ஜிம்மி திங்” பாடலின் கிட்டார் கோவைகள் இந்நினைவுகளைக் கிளர்த்தெழுப்பின. லெகோ அறை என்பது பல பிறந்தநாட்கள் வழியே படிப்படியாக இயல்பாக உருவான ஒன்று. அவர்கள் மேலும் மேலும் ப்ளாக்குகளை சேர்க்கச் சேர்க்க அந்தக் கட்டுமானம் பூதாகாரமாக வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு அவர்கள் “Life Desired – WIP” என்று பெயரிட்டிருந்தார்கள்.
Author: நகுல்வசன்
“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”
ஆங்கிலம் நம்மீது ஏற்படுத்தியிருந்த தாக்கத்தினால், மேலை இலக்கியத்தை ஆங்கிலப் படைப்புகளாகவே எதிர்கொள்வதற்கு நாம் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். ஆனால் அவை உண்மையில் ஆங்கிலப் படைப்புகள் அல்ல; நம்மை நெகிழ்த்திய, நாம் ஒருவருக்கொருவர் மேற்கோள் காட்டிக்கொண்டிருந்த வார்த்தைகள் ஆசிரியரின் வார்த்தைகளே அல்ல, அவர் ஆகிருதிக்குப் பின் மறைவாக நிற்கும் மொழிபெயர்ப்பாளருடையது. இக்கண்டுபிடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவை மூலவடிவங்கள் அல்ல என்ற பிரக்ஞையுடன் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கினேன்.
ஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி
சிறப்பிதழ் என்பதே ஒரு பெரும் கூட்டுமுயற்சி. அதை “எடிட்” செய்வது சில சமயங்களில் நொந்து கொள்ளும்படியாக இருந்தாலும் பெரும்பாலும் ஒரு திறப்பாகவே இருந்தது. இவ்விதழின் பல கட்டுரைகளுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் நூற்றுக்கணக்கான திருத்தங்களையும் கருத்துகளையும் அளித்திருப்பது பெருமையளித்தாலும் அவற்றின் மூலமே பல வங்க இலக்கியப் படைப்புகளையும் நான் கண்டறிந்தேன் என்பதையும் இங்கு பதிவுசெய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
நிஜத்தின் நிழல்
“இப்போது நான் சுகப்படும்படியாக சில காரியங்களை நீ செய்யப் போகிறாய்,” என்று கூறியபடி அவன் உதடுகள் அவள் உதடுகளை நோக்கி இறங்கின. கொடுங்கனவொன்றை அழிக்க முயற்சிப்பது போல் கண்களை இறுக்க மூடியிருந்தாள், பற்கள் கீழுதட்டைக் கவ்வியிருந்தன. முகத்தில் வழிந்த வியர்வையை அவன் நக்கியதால் ஏற்பட்ட அருவெறுப்பின் உந்துதலால் முட்டியை சட்டென உயர்த்தி அவன் குறியை பலம் கொண்ட மட்டும் தாக்கினாள். “பிட்ச்” என்று அலறியபடி அவள் உடலிலிருந்து சரிந்து வலப்பக்கம் உருண்டான்.
Ecce Homo (இவன் மனிதன்!)
ரெடிமேட் டைக்களைத் தூக்கி எறிந்துவிட்டு டை கட்டிக் கொள்ளும் கலையை மணிக்கணக்காகப் பழகினான். கடிகாரம் கட்ட தங்கத்தாலான இரட்டைவடச் சங்கிலி வேண்டுமென்று லக்ஷ்மி அண்ணனுக்கு கேட்டெழுதினான். ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்களுக்கு பெரிய கண்ணாடியொன்றிற்கு முன் நின்று கொண்டு டையையும் தலை வகிடையும் சரி செய்து கொண்டான்.
பேச்சுக்கலையில் தேர்ச்சி பெறுவதற்காக பெல்லின் Standard Elocutionist என்ற பாடப் புத்தகத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ ஓர் அசரீரியைப் போல் அவனுக்குள் ஒரு எண்ணம் ஒலித்தது. “ஆங்கிலத்தில் பெரிய பேச்சாளராகி எனக்கு என்னவாகப் போகிறது. நடனத்தால் அல்ல எனது ஆளுமையால் மட்டுமே நான் கனவானாக முடியும். வீட்டில் மிகவும் கஷ்டப்பட்டு எனக்கு அனுப்பி வைக்கும் பணத்தை நானிங்கு ஊதாரித்தனமாக செலவழித்துக் கொண்டிருக்கிறேன். இங்கு படிக்க வந்தேன், அதை ஒழுங்காகச் செய்வதே என் கடமை” என்று தனக்குத் தானே புத்திமதி கூறிக் கொண்டான்.
