- பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1
- சிற்றின்பம் மற்றும் உணர்திறன்
- பழிவாங்கும் தீ – அம்பை
- காதலில் துறவி
- மணலில் கட்டப்பட்ட பாலம்
- கொக்கென நினைத்தாயோ ?
- கொலையாளியை ஜீரணித்தவர்
- பெரும் பசியை ஆற்றிய ஒரு பருக்கை
- ஏகலைவன்
- தவறாக விதிக்கப்பட்ட சாபம்
- பகைவனுக்கும் அருள்வாய்!
- கீசக வதம்
- வீரனாக மாறிய பேடி
- அஸ்வத்தாமனின் கோபம்
- முடிசூட்டப்படாத ஆட்சியாளர்
- தொடர்ந்த தூதுப்படலம்
- தொடரும் விதுர நீதி
மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா
தமிழாக்கம் : கார்த்திக்
பணிவே உயர்வைத் தரும்
பீமன் பிறக்கும் பொழுதே அதிக வலுவுடன் பிறந்தவன். அவன் வளர வளர அவனது தேகமும், தேகத்தின் வலிமையையும் பெருகியது. அதற்கேற்றாற்போல் அவனது பெருமையும் பரவத் துவங்கியது. ஒருவரது பெருமை அதிகம் பரவினால் அவருக்கு சிறிதளவாவது அகந்தை வரும். பீமனுக்கும் தனது வலிமை குறித்து அகந்தை இருந்தது.
வனத்தில் வசித்து வந்த சமயத்தில், ஒருமுறை தனியாக காட்டில் சென்று கொண்டிருந்தான் பீமன். அடர்ந்த வனத்தின் குறுகிய பாதைகளில் அவன் சென்றுகொண்டிருந்த பொழுது அவனது பாதையை மறித்த வண்ணம் தனது நீந்தல் வாலை நீட்டிய வண்ணம் ஒரு வயதான குரங்கு ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது.
பீமன் வந்த சப்தத்தை கேட்டு விழித்த அந்தக் குரங்கு அவனை உற்றுப் பார்த்து “புகழ் பெட்ரா வீரன் பீமன் அல்லவா நீ? உன்னை வணங்குகிறேன்” எனக் கூறியது.
குரங்கு பேசுவதைக் கேட்டு வியந்த பீமன் “நான் யாரென நீ தெரிந்து வைத்திருப்பதில் சந்தோசம் அடைகிறேன். நான் யாரென தெரிந்து கொண்டாய் அல்லவா? இப்பொழுது உன் வாலை நகர்த்திக் கொண்டு எனக்கு வழி விடு. உன்னை போன்ற உயிரினத்தை தாண்டி செல்வது என்னை போன்ற வீரனுக்கு அழகல்ல” என கூறினான்.
“ஓ பீமா! எனக்கு வயதாகி விட்டது. மேலும், நோய் வாய்ப்பட்டுளேன். எனவே தயைக் கூர்ந்து நீயே என் வாலை நகர்த்தி விட்டு செல்வாயாக” என அவனைக் கேட்டது.

பீமன், அந்த குரங்கின் வாலை தொட அசூயை பட்டு, தனது இடது கை சுண்டு விரலால் அதன் வாலை நகர்த்த முயன்றான். ஆனால், அதன் வால் ஒரு அங்குலம் கூட நகரவில்லை. அதைக் கண்டு வியப்படைந்தாலும், அதை மறைத்துக் கொண்டு தன் இடது கையால் அதை நகர்த்த முயன்றான். அப்பொழுதும் அதன் வால் அகல மறுத்தது. பல யானைகளின் பலம் கொண்டவன் என புகழப்பட்ட பீமனுக்கு அது மிகப் பெரிய அவமானமாக இருந்தது. இருந்த பொழுதும், இம்முறை தனது இரு கரங்களையும் கொண்டு அதன் வாலை தூக்கி நகர்த்த முயன்றான். அவன் பலமுறை பலவிதமாய் முயற்சித்தும் இம்மி கூட அசையவில்லை. அப்பொழுதுதான் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பது சாதாரண குரங்கில்லை என்பது அவனது சிற்றறிவுக்கு புரிந்தது.
அவனது அகந்தை முற்றிலும் அழிந்த நிலையில் “பலவானே! யார் நீங்கள்? உங்களின் சுய ரூபத்தை எனக்கு காட்டுவீர்களாக! என்னை இனியும் சோதிக்க வேண்டாம்!” எனப் பணிவாக வேண்டினான்.
அவனின் பணிவான வேண்டுதலைக் கேட்ட குரங்கு தனது வேடத்தைக் களைந்தது. பீமனை சோதிக்க குரங்கின் வடிவில் வந்தது வாயு புத்திரனான ஹநுமானே! “பெருமையைக் கை விடு! இறைவனிடம் சரண் அடை! நீ வெற்றிப் பெறுவாய்! என்னுடைய முழு பலமும் பாண்டவர்களுக்கு கிட்டும்! அர்ஜுனன் தேர் கொடியில் நான் வீற்றிருப்பேன்!” என ஹனுமான் அவனை ஆசிர்வதித்தார்.
பகைவனுக்கும் அருள்வாய்!
பாண்டவர்களின் வனவாசத்தில் இருந்த சமயத்தில் ஒரு பிராமணர், அரசன் திருதிராஷ்டிரனை பார்க்க சென்றார். வந்த பிராமணரை வரவேற்று அவருக்கு உபசாரங்கள் செய்த அரசன் பாண்டவர்களின் நலம் பற்றி அவரிடம் விசாரித்தான். அவரும் வனவாசத்தின் பொழுது பாண்டவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை விவரித்து, எவ்வாறு அர்ஜுனன் சிவனிடம் இருந்து பாசுபதாஸ்திரத்தை பெற்றான் என்பதைப் பற்றியும், வனத்தில் அவர்களுக்கு பிரச்சனை வரும் சமயங்களில் எல்லாம் எவ்வாறு பீமன் காப்பாற்றுகிறான் என்பதை பற்றியும் விவரித்தார். பாண்டவர்கள் படும் கஷ்டங்களை கேட்ட மன்னனின் மனம் தடுமாறியது. அதே நேரத்தில், கௌரவர்களும், கர்ணனும் அவர்களுக்கு கிடைத்த திவ்ய அஸ்திரங்களை பற்றி கேட்டு மனம் குமைந்தனர்.
பாண்டவர்களின் வனவாசம் முடிய குறுகிய காலமே இருந்ததால் அவர்களை எப்படியாவது சூழ்ச்சியில் சிக்கவைத்து மீண்டும் வனவாசத்திற்கு அனுப்புவதில் சகுனியும் மற்றவர்களும் குறியாக இருந்தனர். எனவே இந்தமுறை அவர்களே நேரில் செல்ல நினைத்து பாண்டவர்கள் அப்பொழுது தங்கி இருந்த காம்யக வனத்திற்கு அருகில் இருந்த த்வைதவனத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். நேராக அரசனிடம் சென்று த்வைதவனத்தில் ஆநிரைகளை கணக்கெடுக்க செல்ல அனுமதி வேண்டினர். அவர்களின் உண்மை நோக்கம் அறிந்த மன்னர் முதலில் அனுமதிக்க மறுத்தாலும், அவர்களின் தொடர் வேண்டுகோளால் வேறு வழியின்றி அனுமதித்தார்.
அவர் அனுமதி கிடைத்தவுடன், துரியோதனன், சகுனி, கர்ணன், துச்சாதனன் மற்றும் தன் படைகள் சூழ த்வைதவனத்திற்கு விரைந்தான். அங்கே வந்தவுடன் ஏரிக்கு அருகே பாண்டவர்கள் முகாம் அமைந்துள்ளதாக தகவல் கிடைக்க, தங்கள் முகாமையும் அங்கேயே அமைக்க துரியோதனன் உத்தரவிட்டான்.
அவனது உத்தரவை ஏற்று அங்கே சென்று கூடாரங்கள் அமைக்க முயன்றனர். ஆனால் அங்கே இருந்த கந்தர்வர்களின் படை அவர்களை விரட்டி அடித்தது. தங்கள் முயற்சியில் தோற்ற வீரர்கள் திரும்ப சென்று துரியோதனனிடம் முறையிட்டனர். தன் வீரர்கள் துரத்தி அடிக்கப்பட்டதில் கோபம் கொண்ட துரியன், தன் நண்பர்களையும் படையையும் அழைத்துக் கொண்டு கந்தவர்களை எதிர்த்து சண்டையிட சென்றான்.
கௌரவர்களுக்கும் கந்தவர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. கந்தவர்களின் தெய்வீக அஸ்திரங்களை கௌரவர்களால் சமாளிக்க இயலவில்லை. ஒரு கட்டத்தில் அவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள இயலாத கர்ணன் போர்க்களத்தில் இருந்து ஓட்டம் பிடித்தான். துரியோதனன் எதிரிகளிடம் தனியாக சிக்கிக் கொள்ள, கந்தர்வர்கள் அவன் தலைமுடியை பிடித்து இழுத்து தங்கள் தலைவனிடம் கொண்டு சென்றனர்.
பல கௌரவ வீரர்கள் அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்து பாண்டவர்களின் கூடாரத்திற்கு சென்று யுதிஷ்டிரனிடம் முறையிட்டனர். அதை கேட்ட பீமன், அவர்களுக்கு இது தேவைதான். இதை நாம் கண்டுகொள்ள வேண்டாம் எனக் கூறினான். மற்ற அனைத்து சகோதரர்களும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின் , தர்மனின் கட்டளைப்படி , அர்ஜுனன், நகுலன், சகாதேவன் புடை சூழ கந்தவர்களை எதிர்க்க பீமன் சென்றான்.
இரு தரப்பினரிடையே கடுமையான யுத்தம் துவங்கியது. கந்தர்வர்கள் தங்களிடம் இருந்த அனைத்துவிதமான திவ்ய அஸ்திரங்களை கொண்டு பாண்டவர்களை எதிர்க்க, அர்ஜுனனோ அவர்களின் ஆயுதங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கினான். இதை கண்டு வியந்த கந்தர்வர்கள் தங்கள் தலைவனிடம் சென்று முறையிட அங்கே வந்தான் சித்ரசேனன். சித்ரசேனனை கண்டு அர்ஜுனன் வியந்தான். அர்ஜுனன் இந்திரனின் சபைக்கு சென்ற சமயத்தில் அவனது நடன குருவாக இருந்தது சித்ரசேனனே.
நீண்ட நாள் கழித்து சந்தித்த இருவரும் மகிழ்ந்து நலம் விசாரித்தனர். அதற்கு சித்ரசேனன் “துரியோதனன், தனது நண்பர்களுடன் இணைந்து உங்களுக்கு தொந்தரவு தரப்போவதாக அறிந்தோம். அதனால் இந்திரன் என்னை படைகளும் இங்கே அனுப்பி உங்களுக்கு பாதுகாப்பு தரக் கூறினார்” என தான் வந்த நோக்கத்தை விளக்கினான். பின், அவர்களிடம் இருந்து துரியனையும் மற்றவர்களையும் விட்டுவிட்டு தர்மரிடம் அழைத்து சென்றான் அர்ஜுனன்.
துரியோதனனுக்கு அறிவுரை கூறியப் பிறகு அவனை விடுவித்து அஸ்தினாபுரத்திற்கு திரும்பி செல்ல அறிவுறுத்தினான் தர்மன்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
