- பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1
- சிற்றின்பம் மற்றும் உணர்திறன்
- பழிவாங்கும் தீ – அம்பை
- காதலில் துறவி
- மணலில் கட்டப்பட்ட பாலம்
- கொக்கென நினைத்தாயோ ?
- கொலையாளியை ஜீரணித்தவர்
- பெரும் பசியை ஆற்றிய ஒரு பருக்கை
- ஏகலைவன்
- தவறாக விதிக்கப்பட்ட சாபம்
- பகைவனுக்கும் அருள்வாய்!
- கீசக வதம்
- வீரனாக மாறிய பேடி
- அஸ்வத்தாமனின் கோபம்
- முடிசூட்டப்படாத ஆட்சியாளர்
- தொடர்ந்த தூதுப்படலம்
- தொடரும் விதுர நீதி
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த காலத்தில் அவர்களின் பசியையும் அவர்களை தேடி வருவோரின் பசியையும் போக்க அக்ஷயபாத்திரம் மிக உதவியாக இருந்தது. அது யுதிஷ்ட்டிரனுக்கு சூரியன் அன்பளிப்பாக வழங்கியது. ஆனால் , ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே அது உணவை அளிக்கும். அன்றைய தேவை முடிந்து அதை தேய்த்து வைத்துவிட்டால் மறுநாளே அதன் மூலம் உணவை வரவழைக்க முடியும்.
ஒருமுறை, ஹஸ்தினாபுரத்தில் இருந்த கௌரவர்களின் அரண்மனைக்கு தனது சீடர்களுடன் வருகை தந்தார் ரிஷி துர்வாசர். மிக கோபக்காரர் என்று பெயர் பெற்றவர் அவர். அவரை மிக மரியாதையுடன் நடத்திய துரியோதனன், அவருக்கும் அவரது சிஷ்யர்களுக்கு சிறந்த விருந்தை அளித்தான். அதனால் மனமகிழ்ந்தார் துர்வாசர். அவர் கிளம்பும் சமயத்தில், அவரிடம் அவர்கள் வனத்தில் இருக்கும் பாண்டவர்களையும் சந்தித்து அவர்களுக்கும் ஆசி வழங்க வேண்டும் என வேண்டிக் கொண்டான். அப்படியே செய்வதாக அவரும் வாக்களித்தார். வனத்தில் இருக்கும் பாண்டவர்களால் அறுசுவை விருந்து அளிக்க இயலாது. துர்வாசரின் கோபத்திற்கு ஆளாவார்கள் என்பது துரியோதனின் எண்ணம்.
அவனுக்கு அளித்த வாக்குப்படியே ஒரு நாள் உச்சி பொழுது கடந்தபின், வனத்தில் இருந்தது பாண்டவர்களின் வசிப்பிடத்தை அடைந்தனர் துர்வாசரும் அவரது சீடர்களும். திரௌபதியை அழைத்த துர்வாசர் அவர்கள் அனைவரும் மிகுந்த பசியுடன் இருப்பதாகவும் நீராடி வருவதற்குள் உணவை தயார் செய்து வைக்குமாறும் கூறிவிட்டு அருகில் இருந்த நீர்நிலைக்கு சென்றனர்.
அன்று அனைவரும் உணவு அருந்திவிட்டக் காரணத்தினால் அக்ஷயபாத்திரத்தை தேய்த்து கழுவி வைத்து விட்டாள். என்ன செய்வதென்று புரியாமல், எப்பொழுதும் துணைக்கு அழைக்கும் கிருஷ்ணனை நோக்கி பிரார்த்தித்தாள். சில நிமிட நேரத்தில் அங்கே வந்த கிருஷ்ணன்,” திரௌபதி! என்னை எதற்கு அழைத்தாய்? எதுவாக இருந்தாலும் சில நிமிடங்கள் காத்திருக்கட்டும். நான் மிகுந்த பசியில் உள்ளேன். ஏதாவது உணவு கொண்டு வா!” என்றான். தானே உணவு இல்லாத பிரச்சனைக்கு அவனை அழைக்க அவனோ உணவு கேட்டால் எங்கே செல்ல என நடந்ததைக் கூறினாள் பாஞ்சாலி. அதைக் கேட்டு சிரித்த கிருஷ்ணன் “கவலைப்படாதே! அந்த பாத்திரத்தைக் கொண்டு வா!” எனக் கூறினான்.
அவள் கொண்டு வந்த அக்ஷயபாத்திரத்தை கவனமாக பார்த்தவன் அதில் ஓரத்தில் ஒட்டியிருந்த ஒரு துணுக்கு சோற்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு “அனைவரின் பசியும் ஆறட்டும்” எனக் கூறினான். பாத்திரத்தை ஒழுங்காகக் கழுவாமல் கிருஷ்ணனுக்கு எச்சில் உணவை அளித்தமைக்கு தன்னையே நொந்துக் கொண்டாள் அவள்.
அந்த ஒரு துணுக்கை சாப்பிடப்பின் பீமனை அழைத்த கிருஷ்ணன் ஆற்றுக்கு சென்று ரிஷியையும் அவரது சீடர்களையும் அழைத்து வருமாறு கட்டளையிட்டான்.
அவன் ஆற்றுக்கு சென்றே அதே நேரம் குளித்துக் கரையேறிய சீடர்கள் அனைவரும் அப்பொழுதுதான் உணவருந்தியது போன்று உணர்ந்தனர். அதை அவர்கள் கூறியதை கேட்ட துர்வாசரும் தனக்கும் அவ்விதமே இருப்பதாக கூறி, இந்நிலையில் பாண்டவர்களை சந்திக்க வெட்கி, பீமனிடம் தங்கள் வயிறு நிறைந்து விட்டதாகாக் கூறி அங்கிருந்தே அனைவரையும் ஆசிர்வதித்து விடைபெற்றனர்.
கிருஷ்ணனின் அருளால் தங்களுக்கு வந்த ஆபத்தை வென்ற பாண்டவர்கள் அவனை வணங்கினர்.
அஷ்டவக்கிரர்

பாண்டவர்கள் வனவாசத்தின் பொழுது பல ரிஷிகள் இருந்த தவம் செய்த இடங்களுக்கு சென்றனர். அவர்கள் சென்ற இடத்தின் புனிதத்தையும் அங்கிருந்த ரிஷிகளின் வரலாற்றையும் அவர்களுக்கு ரிஷி லோமேசர் உபதேசித்தார். அவர்கள் உத்தாலக்கரின் ஆசிரமத்துக்கு சென்ற பொழுது அவரின் வரலாற்றை கூறினார்.
உத்தாலக்கருக்கு இருந்த பல சிஷ்யர்களில் ஒருவர் ககோலா. காகோலா மிக அறிவு கூர்மை வாய்ந்தவர் எனக் கூற முடியாதெனினும் குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடப்பவர். அவரது நடவடிக்கைகளால் மகிழ்ந்த உத்தாலக்கர், தனது மகளை அவருக்கு மணமுடித்தார்.
ககோலாவின் வேத அறிவு எந்த அளவிற்கு மோசமானதென்றால், அவரின் தவறான உச்சரிப்பினைக் கேட்டு தாயின் வயிற்றில் கர்ப்பப்பையில் இருந்த கரு நெளியுமாம். அப்படி பல முறை நெளிந்ததால் பிறக்கும் பொழுதே உடல் எட்டு இடங்களில் கோணலுடன் பிறந்தார். அதனால் ” அஷ்டவக்கிரர் ” என அழைக்கப்பட்டார்.
ஒருமுறை யாரிடமும் எந்த ஆலோசனையும் செய்யாமல். ஜனகரின் அரசவையை சேர்ந்த வந்தி என்ற அறிஞரிடம் வாதத்திற்கு சென்றார் ககோலா. அந்த வாதத்தில் தோற்பவர் கடலில் மூழ்கி உயிரிழக்க வேண்டும் என்பதே பந்தயம். அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே ககோலா தோல்வியுற்று தனது உயிரை நீத்தார். அவருக்கு முன் பல அறிஞர்கள் இவ்விதம் தங்கள் உயிரை நீத்துள்ளனர்.
உடலில் குறியுடன் பிறந்தாலும், அஷ்டவக்கிரர் மிகுந்த ஞானத்துடனும் அறிவுடனும் விளங்கினார். இளம் வயதிலேயே வேத, வேதாந்தங்களை கரைத்துக் குடித்து ஞானியாக விளங்கினார்.
இதற்கு இடையில், மிதிலாவின் அரசனான ஜனகர் மிகப் பெரிய யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். யாகம் நடைபெற்றக் காலத்தில் அவரது அரசவையில் பலவித விவாதங்கள் நடைபெறும் எனவும் அறிவித்தார். தனது தருணத்தை உணர்ந்த அஷ்டவக்கிரரும் அங்கே சென்றார்.
அரசு ஊர்வலம் வந்துக் கொண்டிருந்த பாதைக்கு சென்றவர், அரச பரிவாரங்களுக்கு நடுவே நடக்க துவங்கினார். அதைக் கண்ட காவலாளிகள் அவரை ஒதுங்க சொல்ல “எளியவர்களுக்கும், முடியாதவர்களுக்கு வழி விட வேண்டியது அரச தர்மம் இல்லையா?” என வினவினார்.
ஜனகர் அந்த நாளின் மிகப் பெரிய ஞானிகளில் ஒருவர். இல்லற தர்மத்தில் இருந்தாலும் அதில் மூழ்கி விடமால் தாமரை இலை தண்ணீர் போல் வாழ்ந்தவர். அஷ்டவக்கிரர் சொன்னதைக் கேட்டவுடன் அவரது சிறப்பை அறிந்துக் கொண்ட ஜனகர், அவருக்கு வழி விட்டார். மேலும், அவர் மிதிலைக்கு வந்ததன் காரணத்தை அறிந்துக் கொண்டே வந்தியுடன் விவாதத்திற்கு ஏற்பாடும் செய்தார்.
சில நாட்கள் நீடித்த அந்த விவாதத்தின் முடிவில் அஷ்டவக்கிரர் வந்தியை தோற்கடித்தார். தோல்வியை ஒப்புக் கொண்ட வந்தியும் நதியில் மூழ்கி தனது உயிரை நீத்தார். தனது தந்தையின் மரணத்திற்கு பழி வாங்கிய அஷ்டவக்கிரர், பிற்காலத்தில் ஒரு முனிவரின் வரத்தால் தனது உடல் குறை நீங்கப் பெற்றார்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
