“எவன் ஒருவன் உடலும் மனமும் இயங்கும்போது அந்தச் செயல்களுக்குள் செயலற்ற தன்மையையும், செயலற்று வெறுமனே அமர்ந்திருக்கும் போதும் அந்த நிலையில் செயலையும் காண்பானோ, அவனே மனிதர்களுக்குள் உண்மையான புத்திமான். அவனே யோகி. அவனே தன் அனைத்துக் கடமைகளையும் செய்து முடித்த நிறைவு பெற்றவன் ஆவான்.” என்று ஒரு சுலோகத்தில் கூறுகிறார்.
