கதைகளைவிட, முத்துலிங்கம் அவர்களின் முன்னுரையில் குறிப்பிடும் சம்பவங்களும், ஒவ்வொரு கதாசிரியரின் மனோபாவம் மற்றும் அவர்களது அனுபவப் பகிர்வுகளும் மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய சுவாரஸ்யங்கள்! ஜெர்மனியில் பெர்லின் நகரில் வசிக்கும் எழுத்தாளர் ஒருவர் முத்துலிங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘எப்போது பெர்லின் நகருக்கு வந்தாலும் தன் வீட்டு அழைப்பு மணியை அடியுங்கள்’ என்று கரிசனையுடன் அழைத்திருந்தாராம் – ‘ஆனால் வீட்டு முகவரியைத் தர மறந்துவிட்டார்’ என்று அ.மு. குறிப்பிடுகின்றார்!
Tag: டாக்டர் ஜெ. பாஸ்கரன்
பைரப்பாவின் நாவல் ‘பிளவு’ – ஒரு பார்வை
கணவன் மனைவி முரண்களில், குழந்தைகள் நிலை பரிதாபமானது. நாவலில் வரும் குழந்தைகள், தந்தையைச் சார்ந்தே இருப்பது, பொருளாதாரம் சார்ந்ததா? பாசம் சார்ந்ததா? பெண்ணுரிமையில் தாய்மை உணர்வு அற்றுப்போய்விடுமோ என நினைக்கத் தோன்றுகிறது.
