நற்பண்புகள் நிறைந்த எந்த ஒரு மனிதனும் மேற்கூறிய வகையிலேயே இயங்கி வருவான். ஆனால் கர்மயோகம் என்பது இவ்வாறு செயல்புரிவது மட்டுமல்ல. அதே நேரத்தில் அது எந்த வகையிலும் அடங்காத ஒரு தனித்துவமான செயலும் அல்ல. பொதுப்புரிதலில் கர்மயோகம் என்றால் ஒரு செயலில் தீவிரமாக ஈடுபட்டு அதிலேயே தன்னைக் கரைத்துக் கொள்வது என்பதாக அறியப்படுகிறது. அவ்வாறு செயலுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் கர்மயோகிகள் என்று அறியப்படுகிறார்கள். ஆனால் அத்வைத வேதாந்தத்தின் கூற்றுப்படி இது தவறான புரிதலாகும்
