மகரந்தம்

மணமாகாதவர்கள் மணம் புரிவதாலும், மணமானவர்கள் மணமுறிவு செய்து கொள்வதாலும் ஒரு இல்லம் இருக்கிற இடத்தில் இரண்டு உருவாகி, அதன்மூலம் புதிய வீடுகள், அவற்றுக்குத் தேவையான நுகர்பொருள் வர்த்தகம் மற்றும் செலவுகள் அதிகரித்து பொருளாதாரம் மேம்படும் என்பது ஒரு சுவையான முரண்நகை.

மகரந்தம்

ஒரு பெரும் யுத்தத்தில் அமெரிக்கா அதன் அத்தனை வளங்களை அழித்த பின்னும் எஞ்சி இருப்பது இத்தனை என்றால் எவ்வளவு பெரும் நிதியை ஆப்பிரிக்க, ஆசிய, லத்தின் அமெரிக்க மக்களிடமிருந்து சுரண்டி இருக்க வேண்டும் என்பதை மேற்கின் மக்களோ, அறிஞர்களோ, அரசியலாளர்களோ அதிகம் பேசுவது இல்லை. ஆனால், சமூக/ அரசியல் ஆய்வாளர்களில் பலரும் காலனியம் உலக மக்களுக்கு நல்லதே செய்தது என்று கூட எதிர்ப் பிரசாரம் செய்யத் தலைப்பட்டிருக்கின்றனர்.

மகரந்தம்

உலக வரலாற்றில் 72 மொழிகள் பேசத் தெரிந்தவர் இருந்திருக்கிறார். ஆனால் அவரது ஜீனியசில் எந்த மர்மமும் இல்லை – நம் மழலைகள் பயன்படுத்தும் பிளாஷ் கார்டுகளைத்தன பயன்படுத்தி இருக்கிறார். ஐம்பது மொழிகளைப் பேசத் தெரிந்த ஒருவர் ஹெல்சின்கிக்கு விமானத்தில் பயன்பப்படுகையில் பின்னிஷ் மொழியைக் கற்றாராம். ஆனால் அவரது மகன், தன் தந்தை கூச்சப்படும் இயல்பு கொண்டவரென்றும், தன் சுபாவத்தை மறைத்துக் கொள்ளவே வெவ்வேறு மொழிகள் கற்றார் என்றும் சொல்கிறார்.

மகரந்தம்

உலக வரைப்படத்தில் சீனாவை பார்க்கும் போது ஒரு பெரிய விரிந்த அரங்கு போலத் தோன்றும். இந்த பரந்த அரங்கில் சீனா தன் மக்களையே ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு துரத்திஅடிக்கிறது. இது ஒருவகை சமூக கால்பந்தாட்டம் ஆனால் இங்கு இந்தக் கட்டுரை பேசுவது கால்பந்தாட்ட விளையாட்டு குறித்து.

மகரந்தம்

கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் கையாளும் தரவுகள் அளவில் மிகப்பெரியவை. அவை இந்த தரவுகளை எப்படி கையாளுகின்றன போன்ற தகவல்கள் பொதுவாக வெளியில் வருவதில்லை. ஏதோ ஒரு ரகசிய இடத்தில் இந்த தரவுகளும், அதன் சர்வர்களும் கையாளப்படுகின்றன. ஆனால் முதன் முறையாக ஒரு கட்டுரை உங்களை அந்த ரகசிய இடத்திற்கு கொஞ்சம் அருகில் அழைத்து செல்கிறது.

மகரந்தம்

பணம் பாதாளம் வரை பாயும் என்று சொன்னவர்கள் அதை சக்தியைக் குறிக்கச் சொல்லவில்லை, அது தொடர்ந்து மனிதரை எத்திசையில் அனுப்பும் என்று குறித்தார்கள் போலிருக்கிறது. ஏதோ ரஷ்யா, சீனாவின் முதலியம்தான் கம்யூனிஸ்டு என்று பெயர் தாங்கிய குற்றக் கும்பல்களின் விளையாட்டரங்கு என்று நினைக்கத் தேவையில்லை. உலகெங்கும் இதே கதைதான்.

மகரந்தம்

சமீபத்தில் டோக்யோவில் பல இடங்களில் கதிர் வீச்சு அளவு ஏற்க முடியாத அளவு உயர்ந்திருப்பதாகத் தெரிய வந்ததும் ஜப்பானியர்கள் கொஞ்சம் அரண்டிருக்கிறார்கள். ஃபூகஷீமா அணு உலை உள்ள ஊரிலிருந்து டோக்யோ ஒன்றும் அருகில் இல்லை. பறவை பறக்கும் விதத்தில் 238.34 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சாலை வழியே சுமார் 274.10 கிலோமீட்டர் அல்லது 297.92 கிலோமீட்டர் தூரம். மைல் கணக்கில் இது 148.1 மைல். சாலை வழி தூரம் 170.31 மைல்களிலிருந்து 185.12 மைல்கள். இவ்வளவு தூரத்தில் எப்படிக் கதிர் வீச்சு கடந்தது என்று இப்போது தலைமுடியைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.

மகரந்தம்

உணவு வாங்கப் பணம் இல்லை, வீட்டுக் கடனுக்கு வட்டி கட்டப் பணம் இல்லை என்று தெருவில் வாழ நேர்கிற நிலையில் உள்ள முன்னாள் மத்திய வர்க்கத்தினர் இன்று ஏழைகளுக்கு இலவச உணவு கொடுக்கும் சூப் கிச்சன்களில் வரிசையில் நின்ற வண்ணம் தம் நிலையை நினைத்துக் கண்ணீர் சிந்துகிறார்கள். ஆனால் இன்னும் கோடீஸ்வரர்களுக்கு வரி விதிக்கக் கூடாது என்ற அரசியல் கொள்கையையே ஆதரிக்கிறார்கள் என்பதுதான் என்னே விசித்திரம்.

மகரந்தம்

புவி ஈர்ப்பு விசை பற்றி நமக்குத் தெரிந்தவற்றை நாம் உறுதியாக நம்புகிறோம், இல்லையா? இயற்பியலாளர்கள் இப்படி எல்லாம் எதையும் ஒரேயடியாக நம்புவதில்லை. ஒரு பொருளை, அதுவும் இரும்புக் கம்பி வளைச் சுருள் ஒன்றைக் கீழே போட்டால் அது எப்படி விழும் என்று கேட்டால் நாம் எல்லாம் நேரே கீழே விழும் என்றுதான் நினைப்போம். ஆம், கண்ணுக்கு அப்படித்தான் தெரியும். அது உண்மையா என்றால் அது வேறு விஷயம்.

மகரந்தம்

ஆப்பிரிக்காவிற்கு முதன்முதலில் பயணம் மேற்கொண்டு மனிதர்கள் அந்நாட்டு காடுகள் குறித்தும், அதில் மறைந்திருக்கும் நுட்பங்களையும், மிருகங்களின் குணாதிசியங்களையும் மிக விரிவாக பதிவு செய்துள்ளனர். இத்தகைய பயண குறிப்புகள் சூழியல் பாதுகாப்பாளர்களுக்கு உதவும் பலவித தகவல்களை கொண்டிருப்பதாக அறிஞர்கள் பேசத் துவங்கியிருக்கின்றனர். காடுகள் குறித்தும், மிருகங்களின் செயல்பாடுகள் குறித்தும் வாய்வழி செய்திகளை விடவும், மிக விரிவான தகவல்களை தரும் இந்தக் குறிப்புகள், காடுகளை வரலாற்று நோக்கில் அணுக உதவுகின்றன என்றும் சொல்கின்றனர்.

மகரந்தம்

ஒரு புறம் பார்த்தால் மேற்கு- அமெரிக்கா/ யூரோப் ஆகியன பெரும் கூட்டணியாகச் சேர்ந்து பல வகைகளில் லிபியாவைத் தாக்கி கதாஃபியை ஒழிக்க முயன்றிருக்கின்றன. மேற்கு லிபியாவில் செலுத்தியுள்ள பராக்கிரமத்தின் விஸ்தீரணத்தைப் பார்த்தால் ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் மிகவும் பொறுமையாகவும், நீண்ட தயாரிப்புடனும் இருந்தாலே மேற்கின் அடாவடித்தனங்களை எதிர்கொள்ள முடியுமென்பது தெரிகிறது. மேற்கும், அமெரிக்காவும் தம் ஏகாதிபத்திய நோக்கங்களையோ, உலகம் தம் ஆளுமையின் கீழ்ப்பட்டதே என்ற கர்வத்தையும் சிறிதும் இழந்ததாகத் தெரியவில்லை.

மகரந்தம்

இணையப் பயன்பாட்டாளர்கள் “cookie” குறித்து அறிந்திருக்கலாம். ஒரு தளத்தை முதன் முறை பார்த்துவிட்டு, சில நேரம் கழித்தோ அல்லது அடுத்த நாளோ அதே தளத்திற்கு செல்லும்போது உங்களை வரவேற்கும் வாசகம் ஒளிர்கிறதா? இது தான் குக்கீயின் பணி. குக்கீகளை இணைய உலாவிகள் மூலம் தடுக்கலாம். சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விஷயத்தை கண்டுபிடித்துள்ளனர். சில தளங்கள் புதிய தொழில்நுட்பம் ஒன்றின் மூலம் இணைய உலாவிகளால் கூட ஒன்றும் செய்யமுடியாத குக்கீக்களை உங்கள் கணிணியில் விதைத்துவிடுகின்றன.

மகரந்தம்

நார்வேயில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பும் துப்பாக்கி சூடும் பலரது உயிரை குடித்துள்ளது. இந்த நிகழ்த்திய அந்த மூடனின் 1500 பக்கங்களைக் கொண்டு கையேடு ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த கையேட்டின் ஒரு சில பகுதிகள் கீழே இருக்கும் பக்கத்தில் படிக்கக் கிடைக்கின்றன. மத அடிப்படைவாதம் நிரம்பிய, சக மனிதனை நேசிக்கத் தெரியாத ஒரு முட்டாளின் உளறல்கள் என்று இதைப் படிப்பவர்களால் நிச்சயம் சொல்லிவிட முடியும்.

மகரந்தம்

’சைபர் வார்’ எனப்படும் தகவல் தளத்தில் நடத்தப்படும் போர். இதைச் சீனா உலகெங்கும் நடத்தி வருவதைக் கனடிய ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். சீன ராணுவம் இதற்காக ஒரு பல்கலையையே நிறுவி இருப்பதாகவும் அவர்கள் சொல்கின்றனர். சீனா கனடிய ஆய்வாளர்கள் சொல்வதை மறுப்பதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால் மேற்கின் பல அரசுகள் சமீபத்து ஆண்டுகளில் தம் நிறுவனங்கள் கடுமை

மகரந்தம்

பொதுவாக பூமியின் மிகவும் ஆழமான பகுதிகளில் பல செல் உயிரினங்கள் வாழ முடியாது என்றுதான் அறிவியலாளர்கள் இன்று வரை கருதி வந்தனர் இந்த சூழல்களில் பாக்டீரியங்கள் போன்ற ஒற்றை செல் உயிரினங்களே காணப்படுவது உண்டு. ஆனால் முதன் முறியாக தென் ஆப்பிரிக்க ஆழ்-சுரங்கங்களிலிருந்து பூமியின் அடியாழங்களில் பலசெல்கள் கொண்ட நுண்புழுக்கள் (nematodes) இருப்பது அறிவியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மகரந்தம்

உயிரியல் சமீபகாலங்களில் நிறைய தொழில் துறை நுட்பங்களுக்கு உதவுகிறது. தேனீக்களின் கொட்டு நமக்கு நிறைய கடுக்கும் என்பதைக் கொட்டு வாங்கியவர்கள் அறிவர். சிலருக்கு இந்தத் தேனீக்களின் ‘விஷம்’ ஒவ்வாததால் துரிதமாக எதிர் மருந்து ஏதும் கொடுக்கப்படாவிட்டால் ஆள் உயிருக்கே கூட ஆபத்து நேரும். இந்த ‘விஷத்தை’ என்ன விதங்களில் பயன்படுத்தலாம் என்று அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகையில் இதை வைத்து வெடிமருந்துகள் இருப்பதைக் கண்டறிய ஒரு கருவி செய்ய முடியும் என்று அறிந்தனர்.

மகரந்தம்

அமெரிக்கா பின்லாடனை கொல்ல இந்தப் பத்தாண்டுகளில் ஒதுக்கிய நிதி- 1.3 ட்ரிலியன் டாலர்கள். இது போர்ச்செலவு, நாடெங்கிலும் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், போரில் இறந்த, காயம்பட்ட வீரர்களுக்கான செலவுகள் போன்ற எல்லாவற்றையும் சேர்த்த கணக்கு. 1.3 ட்ரிலியன் என்ற எண்ணில் எத்தனை சைஃபர்கள்/ சுழிகள் உண்டு தெரியுமில்லையா? 1300,000,000,000 டாலர்கள்.

மகரந்தம்

சீனா கட்டுமானத் துறையில் மிகையான அளவில் முதலீடு செய்திருப்பதன் பலனாக அங்கு புல்லட் ரயில்கள் காலியாக ஓடுகின்றன, சிறுநகர்களின் கட்டிடங்களில் குடியிருக்க ஆளில்லை, விமான நிலையங்களில் பயணிகள் இல்லை, அரசு கட்டிடங்களில் பணியாற்ற அலுவலகங்கள் இல்லை, தனியார் குடியிருப்புகளும் வாங்க ஆளின்றி கிடக்கின்றன. சீன அரசு தன் மக்கள் தங்களின் உழைப்பின் ஊதியத்தைப் பெற்று வசதிகளை அனுபவிப்பதைத் தடுப்பதேன்? உள்நாட்டு வளம் பணவீக்கத்தில் கொண்டு நிறுத்திவிடும் என்றும், அதனால் சீன பொருட்கள் உலகச் சந்தையில் போட்டியிட முடியாதென்றும் சீன ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள்.

மகரந்தம்

ஜப்பானியர்கள் அண்மையில் சந்தித்த பூமி அதிர்ச்சியைத் தொடர்ந்த ஆழிப் பேரலையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். உயிரிழப்பு, பொருளாதார இழப்பு என்ற அளவில் மட்டுமில்லாமல் தேசிய அளவில் ஜிஷுக்கு என்ற சுய கட்டுப்பாடு கடைபிடிக்கும் வகையில் அனைத்து தளங்களிலும் ஆரவாரங்களைத் தவிர்க்கிறார்கள்.

மகரந்தம்

வளி மண்டலத்திலிருந்து இது தவிர மின்னல் மூலமாகவும் நைட்ரஜன் பூமிக்கு வரும். இந்த நைட்ரஜன் புவியில் ஒரு சுழற்சியில் உள்ளது. வளி மண்டலத்திலிருந்து நிலம் நீர் என செல்லும் அச்சுழலில் இப்போது கடல்களில் உள்ள நைட்ரஜனில் துண்டு விழுகிறது என்கிறார்கள். உண்மையிலேயே துண்டு விழுகிறதா அல்லது அதன் சுழற்சியில் நாம் இன்னும் அறிந்திராத மர்மப் பாதைகள் இருக்கின்றனவா?

மகரந்தம்

மனித குலத்தின் தேவை வளர வளர, அதற்கு ஈடுகொடுத்து கணிணியின் வேகமும் வளர வேண்டும். இல்லையேல், எளிய மனிதர்களுக்கான நுகர்வோர் மின்ணணுவியல் துறை முதல் பெரும் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் அறிவியல் துறை வரை, பல்வேறு தளங்களில் பெரும் தேக்கம் ஏற்படும். அதனால், வேறு வழியே இல்லை, கணிணியின் வேகம் அதிகரித்தபடி இருக்க வேண்டும். ஆனால் எப்படி? கணிணி வல்லுநர்கள் முன்வைக்கப்பட்ட சவால் இது.

மகரந்தம்

எத்தனையோ தணிக்கைகளையும் மீறி சர்வதேச ஊடகங்கள் வழியே அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கசியும் இந்த தண்டனைகளை இத்தனை கொடூரமானவை என்றால், வெளியுலகம் அறியாமல் கிராமப் பஞ்சாயத்துகளால் கொலை செய்யப்பட்ட பெண்கள் எத்தனை, எத்தனை!

மகரந்தம்

பர்மா, இலங்கை போன்ற தேசங்கள் கூட இந்தியாவை துளியும் மதிப்பதில்லை. உறுதியற்ற அரசும், சுயநலவாத தலைவர்களும் ஒரு தேசத்திற்கு பெற்று தரும் ஆகப்பெரும் மரியாதை இது. பிற அரசாங்கங்களை விட்டுத்தள்ளுங்கள். ஒரு ஆஸ்திரேலிய இசைக்குழு தனக்கு ”All India Radio” என்று பெயரில் உலவுகிறது. இந்திய அரசின் முக்கியமான அங்கமான, அதன் ஒலிபரப்புத் துறையின் பெயரை தனக்கு சூட்டிக்கொள்ளும் திமிர்த்தனத்தையும், இந்த பெயரை பதிவு செய்து தனக்கான உரிமையை உறுதி செய்யத் தெரியாத இந்திய அதிகார வர்க்கத்தின் அரியாமையையும் எண்ணி எண்ணி வியக்கத்தான் முடியும்.

மகரந்தம்

ஒளி ஊடுருவும் சிமெண்ட், இது இருந்தால் நிறைய இருட்டு வீடுகள் சென்னையிலும், கல்கத்தாவிலும், பம்பாயிலும் ஒளி வீசும் கட்டிடங்களாகி விடும். எத்தனையோ கோடவுன்கள் இருட்டுக் கல்லறைகளாக இல்லாமல் மனிதர் நடமாடி வேலை செய்யும் இடங்களாகும். இந்த சிமெண்ட் சுவர்கள் வழியே காற்றும் வீசுமானால், என்னவொரு சுகமாக இருக்கும்? கொசுக்களையும், தூசியையும் மட்டும் வடிகட்டி அனுப்பும்படி வடிவமைக்கச் சொல்ல வேண்டும்.

மகரந்தம்

உலகில் ஐந்தில் ஒருவர் மின்சாரம் இல்லாமல் வாழ்கிறார். இதற்கு முக்கியமான காரணங்கள் அரசியலும் வறுமையும். இவர்களுக்கு அரசாங்கத்தைச் சாராத தொழில்நுட்பம் மூலம் மின்சாரம் கிடைக்க வைத்தால் அவர்களுக்கு அது வரப்பிரசாதம். மேலும் அசாத்திய சமுதாய மாற்றங்களும் ஏற்படும். இந்த சந்தை பல பரிமாணங்கள் கொண்டது. இதனை சரியாகவே சீனா பிடித்துவிட்டது.

மகரந்தம்

உலகில் என்னென்னவோ இயற்கை வளங்கள் தீர்ந்து போய்க் கொண்டிருக்கின்றன. ஆழ்கடலில் மீன்கள் பெரிதும் குறைந்து விட்டன. முத்துச் சிப்பிகள் எங்கே போயின? பல நகரங்களில் உலகெங்கும் சிட்டுக் குருவிகளே காணோம். தேனீககள் பல நாடுகளிலும் பெரும் கூட்டங்களாக அழிந்து போகின்றன. பல காட்டு மிருகங்கள் உலகில் இல்லாமல் போய் விட்டன. தவிர எரிபொருள்கள் தீர்ந்து வருகின்றன. வரும் ஐம்பதாண்டுகளில் குடிநீருக்குப் பெரும் பஞ்சம் எழும் என்று நீர் வள ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்தப் பட்டியலில் இன்னொரு பொருளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஹீலியம் வாயு.

மகரந்தம்

நம் ஊரில் படமெடுக்கும்போது சிரி சிரி என்று சொல்லித் தொல்லை கொடுப்பார்கள் இல்லையா? ஈன்னு சிரிடா என்று குழந்தைகளைச் சொல்வார்கள். பெரியவர்களை என்ன சொல்வது என்று தயங்கிக் கொஞ்சம் சிரிங்க சார், அம்மா என்பார்கள். மேற்கில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு விதமாகச் சிரிக்கச் சொல்கிறார்களாம்.

மகரந்தம்

கடல் அமிலமாகிறது என்று ஆபத்தறிவிப்புகள் படித்திருப்பீர்கள், அதனாலென்ன என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். அமிலமாகும் கடல் நீரில் உயிரினங்கள் வளர்வது மிகக் குறையும். உயிரினங்கள் இல்லாத கடல் உலக மக்களுக்குப் பெரும் நாசததைக் கொணரும், ஏனெனில் கடலிலிருந்து கிட்டும் உணவு உலக மக்கள் திரளுக்குப் பெரும் பங்கு ஊட்டத்தை அளிப்பது. இங்கு கொணரப்படும் செய்தி சொல்வது வேறு ஒரு விந்தையைப் பற்றியது.

மகரந்தம்

சொரய்யா என்றொரு இரானியப்பெண், அயத்துல்லா கொமேனியின் ஆட்சியின்போது, திருமணத்தை மீறிய தகாத உறவு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது ஏதோ வெஞ்சினத்தால் செய்யப்பட்ட கொலை அல்ல. அப்பெண் வசித்த கிராமத்து நிர்வாகமே தீர்ப்பாக எழுதிச் செய்த கொலை. அப்பெண்ணின் வயதான தந்தையே தன் மகளைக் கொல்வதற்கான முதல் கல்லை எடுத்து எறியும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். இப்போது அப்பெண்ணின் துயரமான கதை ஒரு விவரணப்படமாக வெளிவந்திருக்கிறது.

மகரந்தம்

ஒரு விலங்குக்கு சுயபிரக்ஞை இருக்கிறதா என்று கண்டுபிடிக்கச் செய்யப்படும் பரிசோதனை அதன் சருமத்தில் ஒரு இடத்தில் வண்ணமடித்து அதன் முன் கண்ணாடியை வைப்பது. அந்த விலங்கு கண்ணாடியை பார்த்து தன் சருமத்தில் அந்த குறிப்பிட்ட வண்ணமடித்த பகுதியைத் தொட்டால் அதற்கு சுயபிரக்ஞை உண்டாம்.

மகரந்தம்

மானுட முயற்சிக்குப் பூமி அளவில் தாக்கம் இருப்பதால்தானே எத்தனையோ மிருகங்கள், ஜீவராசிகளை நாம் அழித்திருக்கிறோம், அது தெரிந்தும் மானுடரால் பூமி அளவில் பாதிப்பில்லை என்ற கருத்து இருக்க என்ன காரணம், எல்லாம் வல்ல கடவுள் என்ற ஒரு கற்பிதம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை இதில் எத்தனை பங்கு வகிக்கிறது?

மகரந்தம்

ஒரு தனி உயிர் தன்னுடைய நேரத்தை தன் இனப்பெருக்க சாத்தியங்களை ஓரளவாவது துறந்து தன் உயிரினக் கூட்டத்துக்கு நேரத்தையும் தன் சக்தியையும் கொடுப்பதற்கு பின்னால் இயங்கும் ஆதாரமான பரிணாம விதிகள் என்ன? ஈ.ஓ.வில்ஸன் தன் வாழ்க்கையையே இந்த ஆராய்ச்சியில் செலவழித்திருக்கிறார்.

மகரந்தம்

தோரியத்தின் ஒரே பிரச்சினை அதில் மிஞ்சும் பொருள்களை வைத்து அணுகுண்டு தயாரிக்க முடியாது. இந்த ஒரு காரணத்துக்காகத்தான் உலக அணுசக்தியில் தேர்ச்சி பெற்ற நாட்டின் அரசுகள் தோரியத்தைப் பயன்படுத்தாமல், அதைவிட பன்மடங்கு கடினமான முயற்சியிலேயே கிட்டக் கூடிய யுரேனியத்தைத் துரத்தினார்கள். இப்போது நம் தேவை குண்டுகள் அல்ல, மின்சக்தி.

மகரந்தம்

மேற்குலகம் தன்னுடைய கழிவுகளை மூன்றாம் உலக நாடுகளில் குவித்து வைக்கும். முதலில், குப்பைகள் ஏந்திய கப்பல்கள் வரும். அதைத் தொடர்ந்து வரும் சுகாதாரக் குழு அந்நாட்டு மக்களை சுகாதாரம் குறித்த பிரக்ஞை சிறிதுமில்லாதவர்கள் என்று அடையாளம் கண்டு அறிவிக்கும்.

மகரந்தம்

அறிவியல் புனைவு படைப்புகள் கற்பனை என்ற சட்டகத்தை தாண்டிய வாசிப்பை கொண்டதாக இருக்கும். சமகால சமூக(அல்லது)அரசியல் நடவடிக்கைகள் மீதான விமர்சனத்தை தனக்குள் கொண்டிருக்கும். தான் வாழும் சமூகத்தில் நிலவும் கட்டுப்பாடுகள், புனைவின் வழியாக தன்னுடைய விமர்சனத்தை முன்வைக்கும் அவசியம் எழுத்தாளனுக்கு ஏற்படுகிறது.

மகரந்தம்

தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா மூலமாக ‘தற்செயலாக’ வந்து இறங்கியிருக்கும் மாவுப்பூச்சி 2,00,000 ஹெக்டேர் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியை அழித்துவிடக் கூடுமென கணிக்கப்படுகிறது. ஒரு வழி இருக்கிறது. அமெரிக்கா வியட்நாம் காடுகளில் செய்த இராசயனப் போரை போல ப்ரோஃபனோபஸ்,அசாடிராக்டின் கெமிக்கல்களைத் தெளித்து புஷ் பாணியில் மாவுப்பூச்சிக்கு எதிரான போரில் இறங்கிவிடலாம். பெருச்சாளிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்திய கதையாக மரவள்ளிக் கிழங்கு மாவில் விஷம் ஏறிவிடும்.

மகரந்தம்

ஹோமரின் காப்பியத்திலும் சரி, பல பண்டை இலக்கிய நூல்களிலும் சரி, வண்ணங்கள் பற்றிய விவரணை மிகக் குறைவாக இருப்பதால், மனிதக் கண்ணின் திறன் கடந்த 3000 – 4000 வருடங்களில்தான் வளர்ந்திருக்கிறது என்றும், நவீன காலத்தில்தான் வண்ணங்கள் நிறைய உருவாகி இருக்கின்றன என்றும் நிறைய முட்டாள்தனமான முடிவுகளுக்கெல்லாம் வந்திருக்கிறார்கள்.

மகரந்தம்

அண்டார்க்டிகா என்ற பகுதியைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள். அங்கு நீர் என்று தனியாகக் கிடையாது, ஏனெனில் உலகின் மிகக் குளிரான சில பகுதிகளில் இது ஒன்று. அங்கு எங்கும் கிட்டுவது பனிக்கட்டி. தரைப்பரப்பு முழுதும் பல மைல் உயர பனிக்கட்டிகளே அடுக்கப்பட்டிருக்கும். அந்தப் பகுதியில் மனிதர் என்ன விளைவித்து எப்படிச் சாப்பிடுகிறார்?

மகரந்தம்

பல ஆசிய நாடுகளில் கிணறுகளில் உள்ள தண்ணீரில் ஆர்ஸெனிக் என்னும் கொடும் விஷம் கலந்த நீர்தான் கிடைக்கிறது. இந்த நீரை அருந்தும் ஆசிய மக்கள் பலவகை நோய்களுக்கு உள்ளாகிறார்கள். இந்தியா, வங்கதேசம், பர்மா போன்ற நாடுகளில் குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் இந்தப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது. இமயமலை சார்ந்த வெளிகளில் அடிமண்ணில் உள்ள பண்டைக்காலக் கரியடுக்குகளில் இருந்துதான் இந்த நஞ்சு கசிகிறது.

மகரந்தம்

அமெரிக்க ராணுவத்தில பணியாற்றியதாகச் சொன்னால் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு அந்நாட்டுத் தேர்தல்களில் வெல்லுவது கொஞ்சம் எளிது. ப்ளூமந்தால் என்ற ஒரு அரசியல்வாதி இப்படித்தான் வியத்நாம் போரில் தாம் பங்கெடுத்ததாகப் பொய் சொல்லித் தேர்தலை வெல்லப் பார்த்தார், சமீபத்தில் மாட்டிக் கொண்டார். அவரிருந்த ராணுவக் குழு, அமெரிக்காவை விட்டுப் போனதே இல்லை

மகரந்தம்

நாம் நம் அணுசக்தி நிலையங்களின் கழிவுப் பொருட்களை என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எங்கே புதைக்கிறோம்? யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள். தில்லிப் பல்கலைக் கழகத்தின் அணுக் கழிவுகளால் சமீபத்தில் உயிரிழந்த பலரைப் பற்றிய செய்தியைப் படித்திருப்பீர்கள். அது குறித்த ஒரு பகிரங்க விசாரணையோ, அந்த மாதிரி மோசமான முறையில் கதிர்வீச்சு நிறைந்த பொருட்களை விட்டெறிந்த அலுவ்லர்கள், அறிவியலாளர்கள், பொறியியலாளர்களை இந்த மரணங்களுக்குப் பொறுப்பேற்கவைக்க ஏதும் முயற்சி செய்யப்பட்டதா? அல்லது அப்படி கழிவுப் பொருட்களை நிர்வகிக்க அரசு ஏதும் நடைமுறைகளை இன்னமுமே உருவாக்கவில்லையா?

மகரந்தம்

இறந்த உடலில் உயிருக்கான ஏதேனும் அறிகுறி இருக்கிறதா என பார்த்தார்கள். அவளது மூச்சை மீண்டும் கொண்டு வர முடியுமா என முயற்சி கூட செய்து பார்த்தார்கள். அன்றைய இரவு முழுவதும் அவளது மகள் அவள் உடலுடனேயே இருந்தாள். மறுநாள் அவள் உடலை சுத்தம் செய்தாள்….அட ஒரு சாவில் இதெல்லாம் சகஜம் தானே என்கிறீர்களா? ஆப்பிரிக்க சிம்பன்ஸிகளின் சாவு ஒன்றினைத் தொடர்ந்து அவர்களின் நடத்தைகளை ஆவணப்படுத்தியுள்ள ஒரு ஆய்வு சொல்லும் விஷயங்கள் இவை.

மகரந்தம்

போர்க்காலத்தில் இரு தரப்பினரும் தமிழர் வாழ் பகுதிகள் முழுதும் எங்கெல்லாமோ கண்ணி வெடிகளைப் புதைத்து இருந்தனர் என்பது நமக்கு ஒரு தகவலாகத் தெரியும், ஆனால் அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு அவை அன்றாடத் தாக்குதல்கள், பெரும் பயம் தரும் ஆபத்துகள், அவர்களைத் தம் வீடுகளருகேயோ, வயல்களிலோ சுதந்திரமாக நடமாடவோ, அவற்றில் உழைத்து வாழ்வாதாரம் தேடுவதோ சாத்தியமில்லாமல் ஆக்கும் பயங்கரங்கள்.

மகரந்தம்

அவர்கள் மற்றொரு பயங்கர விஷயத்தை கண்டு பிடிக்கிறார்கள். அவர்கள் என்னதான் முயன்றாலும் நிரந்தரமாக உடலை பதப்படுத்தி அப்படியே கெடாமல் வைப்பது இயலாது (குறைந்தது அன்றைக்கு இருந்த தொழில்நுட்பத்துக்கு) ஆறுமாதத்துக்கு ஒருதடவை அதனை மீண்டும் எடுத்து சுத்தம் செய்து பதப்படுத்த வேண்டும். என்ன செய்வது இந்த போராட்டங்களை அன்றைய பாதுகாப்பற்ற சூழலை, அரசியலை எல்லாம் வைத்து உருவாக்கப்பட்ட நாடகம்தான் “Lenin’s Embalmers”.

மகரந்தம்

சீனா உலக மகா சக்தியாகிக் கொண்டிருக்கிறது என்று ஒரு சாரார் எக்காளமிடுகிறார்கள். இந்தியாவிலேயே இந்தியா மோசம், சீனா நம் தலைமை என்று அரசியல் கோஷத்தைக் கொண்ட மனிதர்கள் கட்சிகள் நடத்துகிறார்கள். சுய வெறுப்பு இந்தியரிடம் அத்தனை உள்ளது. சீனர்கள் தம்மை உலகத் தலைமைக்கானவர்கள் என்று பல நூறாண்டுகளாகவே கருதி வருகிறார்கள். சீனா உண்மையில் எங்குள்ளது? உலகத் தலைமையருகேவா, அல்லது ஏற்கனவே தலைமையைக் கைப்பற்றி விட்டதா?

மகரந்தம்

மனிதர் எப்போது எழுதப் படிக்கத் துவங்கினார்? மனிதர் பரிணாம ரீதியாக வளர்ந்து மேலெழுந்தார் என்பதையே நம்பாதவர் மேற்கில் ஏராளம். அவர்கள் விவிலிய நூல் சொல்வதுதான் இறுதி வரலாறும், ஒரே வரலாறும் என்று நம்பும் மக்கள். ஆனால் மனிதர் 40 ஆயிரம் வருடங்களாகவே எழுதப் படித்து வந்திருக்கிறார்.

மகரந்தம்

இணையத்தின் தற்போதைய காய்ச்சல் Google Buzz. நட்சத்திர நடிகர்களின் புதுப்படங்களை போல “நல்ல ஓப்பனிங்”. ஆனால் இது நீண்ட வெற்றியை பெறுமா? காலம் தான் பதில் சொல்லவேண்டும். ஒன்று கவனித்தீர்களா, கூகிள் நிறுவனத்தின் பல தயாரிப்புகளும் செயல்முறையில் ஒருபோல இருக்கும்! கூகிள் நிறுவனத்தின் Talk, Buzz, Wave போன்றவை ஒரே குடும்பத்தில் அடங்கிவிடும். ஒரே சேவையை அளிக்க அது ஏன் இத்தனை தயாரிப்புகளை வெளியிடுகிறது?

மகரந்தம்

1979 இலிருந்து 2001 வரையான காலகட்டத்தில் ஏராளமான கப்பல்கள் நடுக்கடலில் மூழ்கினவாம். ‘79 இலிருந்து 1995 வரை யூரோப்பியக் கப்பல்களில் மட்டுமே, வருடத்துக்கு இரண்டு. 1995க்குப் பிறகு வருடத்துக்கு ஒன்பது. இதென்னடா புதுப் பிரச்சினை என்று சில யூரோப்பிய நாடுகள் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கின்றன. ஸ்காலியா என்கிற இத்தாலிய இயற்பியல் பேராசிரியர், இந்த மர்மத்தை முடிச்சவிழ்த்து விட்டதாகச் சொல்கிறாராம். எல்லாம் பணம் பண்ணுகிற வேலைதாங்க.

மகரந்தம்

ஆண் க்ரோமோசோமான “Y” பாலூட்டிகளில் ஒருவித ‘சீரழியும்’ – அதாவது பரிணாமத்தில் பொருளிழக்கும் செயலிழக்கும் ஒரு க்ரோமோசோம் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் சில நவீன ஆராய்ச்சிகள் -சிம்பன்ஸி மானுட Y க்ரோமோஸோம்களை ஆராய்ந்ததில் கடந்த ஆறு மில்லியன் ஆண்டுகளில் இந்த க்ரோமோஸோம் அதிவேக பரிணாம மாற்றமடைந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

மகரந்தம்

அவதார் படத்தின் பிரம்மாண்டத்தில், பிக்ஸல் பிக்ஸலாக வடிவமைக்கப்பட்ட அதன் கிராபிக் அசாத்தியத்தில் மயங்கி கிறங்கி இருப்பவர்களுக்கு ஒரு செய்தி. அத்திரைப்படத்தின் வேற்றுலக சிருஷ்டியில் முக்கிய பங்கு வகித்தவர் ஜோடி கோல்ட் (Jodie) எனும் தாவரவியலாளர். வேற்றுக்கிரகமொன்றை முதன்முதலாக ஆராயும் ஒரு தாவரவியலாளர் எவ்வாறு நடந்து கொள்வார் எனும் உணர்ச்சிகளை இவரே அத்திரைப்பாத்திரங்களுக்கு சொல்லி கொடுத்தார்.