சொல்வனம் சிறப்பு வெளியீட்டு அறிவிப்பு: “கவிதையின் நேரம் – சொல்வனம் சிறப்பிதழ்”

இதழ்-340 – சொல்வனம் | இதழ் 340 | 13 ஏப் 2025

அன்பார்ந்த வாசகர்களுக்கும் கவிஞர்களுக்கும்,

சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளாலும், “கவிதையின் நேரம்” என்ற சொல்வனம் சிறப்பிதழுக்கான சிறப்பு தொகுப்புப் பணிகளின் காரணமுமாக, இம்முறை சொல்வனம் இதழ் சிறிது தாமதமாகி, ஏப்ரல் 30 அன்று பிரசுரிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தத் தொகுப்பை செம்மையாக அமைப்பதற்காக நிகழும் இந்தத் தாமதம், உங்கள் சிறந்த படைப்புகளை மேலும் சேர்க்கும் ஒரு அரிய வாய்ப்பாகும்! கடைசி நேரக் கவிதைப் படைப்புகளும் மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளப்படும்.

உலகம் எப்போதும் கவிஞனின் கனவுகளுக்கான நிலமாகவே இருந்து வருகிறது. கலைக்கும் கற்பனைக்கும் எல்லையில்லை — கவிதையின் நேரம் என்றும் இன்றே தான்!

உங்கள் வார்த்தைகளின் ஒளியில் சொல்வனத்தை மேலும் பிரகாசிக்கச் செய்யுங்கள்.

அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழு

பி.கு: முதல் சிறப்பிதழான 340-ஆம் இதழை வாசித்து விட்டீர்கள்தானே!?

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-340


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.