உண்மையுமாய் இன்மையுமாய்…

நிர்வாணத் தேடலின் துவக்க நிலையில் ஒரு உரையாடலின் போது சித்தார்த்தன் கோவிந்தனிடம் சொல்கிறான் //”தியானம் என்பது என்ன? உடல் மறந்து கிடப்பதும், உபவாசமிருப்பதும், மூச்சை அடக்குவதும் எல்லாம் என்ன? அகத்தை விட்டுப் பறப்பதுதானே? ‘நான்’ எனும் வேதனையிலிருந்து சற்றே தப்பித்துக் கொள்ளும் தந்திரங்கள் தானே? துயரங்களையும் தொல்லைகளையும் சற்றே மறந்திருக்கிற தன் ஏமாற்றம் தானே?”//