வாழ்வெனும் விசும்பின் ஓர் துளிர் 

இத்தொகுப்பில் பல கதைகள் மனதை நெகிழ வைத்து கண்கள் நிறைத்தன. அவர் ஒரு ஏழை கோவில் அர்ச்சகர்/குருக்கள். மகன் திருமணமாகிய சில வருடங்களிலேயே இளம் வயதில் இறந்து விடுகிறான். மருமகள் இரண்டு குழந்தைகளுடன், இங்கு புக்ககத்தில் தான் வசிக்கிறாள். பேரக் குழந்தைகளுக்கு தாத்தாவின் மேல் மிகப் பிரியம். மகள் முக்தா திருச்சி கணவன் வீட்டிலிருந்து சில நாட்கள் முன்பு தான் இங்கு வந்திருக்கிறாள். கொஞ்ச நாள் தங்கிவிட்டு திரும்பிப் போகிறாளா? என்ன விஷயம் என்று முழுதாகத் தெரியவில்லை. ஆனால் திருமணத்திற்கு முன்பு முக்தாவிடம் இருந்த கலகலப்பும், உற்சாகமும் இப்போது இல்லை. குருக்களுக்கு சமீப காலமாக மனதில் சஞ்சலமும், கேள்விகளும், நாத்திக எண்ணங்களும் தலைதூக்குகின்றன