மாயையில் துளிர்க்கும் மலர்கள்

அந்த அறையின் கதவைத் தட்டிப்பார்த்துவிட்டு, கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள். வயதாகியும் அபுவின் மீதான ஈர்ப்பு அப்படியே இன்னுமிருக்கிறது. அவனும் அப்படியே. திங்கள் வெள்ளை, செவ்வாய் மஞ்சளும் சிகப்பும் எனப் பல வண்ணங்களில் ஒவ்வொரு நாளும் கைக்கொள்ளும் அளவு மாத்திரைகள் இருவருமே எடுத்துக்கொள்ளவேண்டியதாகிவிட்டது. இருந்தாலும் என்னைப் படுக்கையிலிருந்து எழுப்பிக் கைதாங்கலாகக் குளியலறைக்கு அழைத்துச் செல்லவும், வெளியே செல்லும்போது என்னை வண்டியில் அமரவைத்துத் தள்ளிக்கொண்டும் செல்கிறான். என்னிடம் அவன் முழுமையாகவே திரும்பி வந்துவிட்டான்.

இலைகளுதிர்ந்த பின் மலைகள்

அந்த நீண்ட திண்ணையில்  ஜாதிமல்லி, காக்கரத்தான், ஜெவ்வந்தி, மரிக்கொழுந்து, நந்தியாவட்டை , மருக்கு, டிசம்பர் பூ, ரோஜா எனப் பலவிதமான வண்ண வண்ண பூக்களின் சிறு சிறு குவியல்களின் மத்தியில் அமர்ந்து பூக்களை ஜோடியாக எடுப்பதும் நாரில் வைத்து விரல்களால் வளைத்து சரக் சரக் என இழுப்பதுமாக ஒரு தாள நயத்துடன் சரம் சரமாக பூக்கள் கட்டுவதும் மாலைகள் சுற்றுவதுமாக அவர் வேறு ஒரு ஆளாக உருவெடுத்திருப்பார். பூ கட்டும்போது அவர் முகமும் கைகளும் வெவ்வேறு பாவனைகளும் அசைவுகளுமாக மாறி அதனுடன் உரையாடிக்கொண்டிருப்பதுபோல இருக்கும்

சுழல்

எண்ணங்கள் பலவற்றைத் தொட்டுத் தொட்டுத் திரும்பிக்கொண்டிருந்தது. மனது எதையும் தொகுக்கும் நிலையிலில்லை. காலையில் லோகமாதேவியை சந்தித்ததை பற்றி நினைத்துக்கொண்டாள். எப்போதும் அவளிடமிருக்கும் அந்தக் கனிவான பார்வையும், உண்மையான அக்கறையும் ஆறுதலாக இருக்கிறது. எத்தனை பிரசவங்கள் பார்த்திருப்பாள். எத்தனை குழந்தைகளின் தரிசனத்தை, முதல் அழுகுரலை அவள் கேட்டிருப்பாள். அவளைவிட வேறு யாருக்குத் தெரியும் தனக்கென்று ஒரு குழந்தை இருக்கும் மேன்மையும், இல்லாமல் இருக்கும் வேதனையும்