‘சாதகப் பறவையின் காத்திருப்பு’ மற்றும் ’துப்பாக்கி போல் சொகுசாய் கிடக்கிறது பேனா’ 

படைப்புலகம் என்கிற அரசவையில் வீற்றிருக்கும் படைப்பாளிகளில் திறனை அவரவர் படைப்புகள் ஊடாக அவரது விமர்சன துலாக்கோல் அளவிட முயற்சிக்கிறது. ’செட்டியார் மிடுக்கை’ப் பார்க்காது, அதாவது படைத்தவர் யார் என்பதைக் காட்டிலும்  அன்னாருடைய சரக்கின் மிடுக்கைக் கணக்கிற்கொண்டு, படைப்பினை நவீன இலக்கிய எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் அணுகியுள்ளார்.