அஷ்வினுக்கு சதுரங்க ஆட்டத்திலும் ஆர்வம் அதிகம். அதில் தென்படுகிற, அதன் அங்கமே ஆகிற லாவகங்களை, சாதுர்யக் காய்நகர்த்தல்களை கிரிக்கெட்டிலும் புகுத்தப் பார்த்தாரோ ! கிரிக்கெட் எனும் மாபெரும் ஆட்டத்தின், குறிப்பாக அவரது கலையான ஸ்பின் பௌலிங்கில் மரபுவழி நுணுக்கங்களை அங்கீகரித்ததோடு, நவீன விளையாட்டின் விளிம்புகளில் மேலும் மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள்பற்றி சிந்தித்தவண்ணமே இருந்தவர்.
Tag: ஏகாந்தன்
ஆர்.எஸ். தாமஸ் கவிதைகள்
அவர்களது கைகளை
என் கைகளில் எடுத்துக்கொள்கிறேன்
அழுத்தமான கைகள்
அன்பில்லை அவற்றில்,
வலிய வரவழைக்கப்பட்ட
ஒரு மென்மையைத் தவிர.
கிராமத்தின் பாழுங்குடிசைகளிலிருந்து
வந்து நிற்கும் அற்பமான ஆண்கள்.
முகநாடகம், மேலெழுந்தபோது
அந்தச் செடியின் ஜீவன்
வானம் பார்க்கும் இளமிலைகளில்
தீரா நடனமாடிக்கொண்டிருந்தது
குருத்தொன்று தலையில்
பொங்கியெழத் தயாராய்.
…என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி
அவர் குறிப்பாக எதையும் சொல்லவந்தாரில்லை. தன் வார்த்தைகளின் மூலம் யாரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவோ, எவரையும் மாற்றவோ, நம்பவைக்கவோ முயன்றதில்லை. ”நாயின் மீது கல்லெறிவதுபோல என்மீது கேள்விகளை எறிகிறார்கள். நாய் குரைக்கிறது. நானும் குரைக்கிறேன்! அவர்களோ என் குரைப்பிலிருந்தும் ஏதேதோ அர்த்தம் காண்கிறார்கள்’ என்கிறார்.
