சஞ்சாரம் நாவல் வாசிப்பனுபவம்

பக்கிரியை பொருத்தவரை நாதஸ்வரம் என்ற கருவி விசித்திரமானது. ஒரு சாவியை போல் அவன் மனதை திறந்து புதைந்துள்ள ரகசியங்களை, சந்தோஷத்தை, கண்ணீரை, வலிகளை காட்டுகிறது. ஈர வேட்டி உளர்வதைபோல் மனம் எடையற்று போய்விடுகிறது. சிலசமயம் குளத்தில் மூழ்கிச் சென்று மண் எடுப்பது போல் மூச்சு திணறுகிறது, உடல் முழுதும் கண் முளைத்தது போலும் தோன்றும்.  வாசிப்பில் ஆழ்ந்தால் உடலே இல்லமால் போய்விடுவதை உணர்கிறான். அந்த உணர்வில் பெறும் ஆனந்தத்தை அடைகிறான்.

பட்டாவளி

இப்போதும் ஒன்றும் தாமதமாகவில்லை. கைவசம் அவர்களைத் தொகுத்துக் கொண்டால், இந்த இதழில் எவரெவரைத் தவற விட்டோமோ, அவர்களை வரும் வெளியீடுகளில் கவனிக்கலாம். வரும் வாரங்களில் வாசிக்க எடுத்து வைக்கலாம். குறைந்த பட்சம் மற்றவர்களையாவது படிக்குமாறு தூண்டலாம்.இதுதான் இந்த பட்டியல் பதிவின் குறிக்கோள்

தாகூரின் கூப்பிய கரங்கள்

இந்த ஆவணப்படப் பணியைக் கண்காணிக்க அரசு ஒரு குழுவை ஏற்படுத்தியது. அவர்களின் வழிகாட்டுதலின் படியேதான் படம் உருவாக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காதம்பரி தேவியின் தற்கொலை குறித்தோ, காந்தியோடு ஏற்பட்ட பிணக்குகள் பற்றியோ, முசோலினியைப் பாராட்டியதைப் பற்றியோ, எந்தத் தகவலும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறக்கூடாது. சர்ச்சைக்குரிய விஷயங்களைப் படத்தில் அனுமதிக்கமுடியாது என்று கண்காணிப்புக் குழு உறுதியாகச் சொன்னது.