அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்

வேதாந்தம் என்றால் வேதத்தின் அந்தம் (இறுதி) என்று பொருள். நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் இறுதிப் பகுதியாக வருவன உபநிஷத்துக்கள். இவை மெய்ப்பொருள் குறித்தும், தனிப்பட்ட ஜீவனுக்கும், எல்லாமுமாக இருக்கும் பிரம்மத்துக்கும் உள்ள உறவு குறித்தும் ஆராய்ச்சி செய்கின்றன. இவ்வுபநிஷத்துக்களே வேதாந்தம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. எனவே வேதாந்தம் என்று சொன்னால் அச்சொல் நேரடியாக உபநிஷத்துக்களையே குறிக்கும். 

செயற்பாலது ஓரும் அறன்

மோக்ஷம் என்பது சகல துயரங்களிலிருந்தும் விடுதலை என்று வர்ணிக்கப்படுகிறது. அது நிரந்தரமானதும் கூட. ஒரு முறை அடைந்தால் அதை இழக்க முடியாது. ஒரு செயலின் மூலம் அடையப்படும் எல்லாப் பொருட்களும் காலவரையறைக்குட்டப்பட்டவை. ஒரு காலத்தில் அடையப்பட்ட பொருள், இன்னொரு காலத்தில் இழக்கப்பட்டே தீரும். எனில், இழக்கவே முடியாத பொருளை அடைதல் எங்கனம்?

3. நுண்பொருள் காண்பது அறிவு

தன்னை அறிதல் எங்ஙனம்? நான் இருக்கிறேன் என்பதை ஒருவர் அறிந்து கொள்வதற்கு புறக்கருவிகளின் உதவி அவசியமே இல்லை. நான் என்ற உணர்வு நம் எல்லோருக்குமே சுயமாக விளங்கி வருகிறது. “ஆத்மா ஸ்வதசித்தம்.” நம் யாருக்குமே நம்முடைய இருப்பு குறித்து எந்த விதமான ஐயமும் இல்லை. இங்கு சிக்கல் என்னவென்றால், நாம் எல்லோரும் நம்மைக் குறித்து ஒவ்வொரு விதமாக அறிந்து வைத்துள்ளோம்.