வார்த்தைகளால் சொல்லி சொல்லி மாய்ந்து போய்விட்ட ஒரு விடயத்தை சொல்ல முயன்று தோற்று போகிற துயரம் ஒரு எழுத்தாளனுக்கு சுகமானதுதான். இயற்கையிடமும், பிரபஞ்சத்திடமும் கலை உணர முயன்று தோற்று போய்க்கொண்டேயிருக்க பிரபஞ்சம் வார்த்தைகளின்றி விரிந்து கொண்டேயிருக்கிறது. இவ்வளவுதான் சொல்லிவிட்டோம் என்று அவன் சாயும்போது அது விரிந்து அதன் புதுப்பகுதிகளை காட்டிக்கொண்டே நீள்கிறது.
Category: புத்தகவிமர்சனம்
பசியும் பரிவும்
இளங்கோ கிருஷ்ணன் முக்கியமான இளங்கவிஞர்களில் ஒருவர். இவர் கவிதைகளில் காணப்படும் வசீகரமான சொற்செட்டும் ஒரு கதைத்துணுக்குபோல அமைந்துவிடுகிற வடிவமைப்பும் வாசகர்களை உடனடியாகக் கவனிக்கத் துண்டும் கூறுகள். கவிதையின் பொருள் எழுத்துத்தளத்திலிருந்து மிக இயல்பாக வாழ்க்கைத்தளத்தை நோக்கி நகர்பவையாக உள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் கொண்ட “காயசண்டிகை” தொகுப்பில் நல்ல கவிதைகள் பல உள்ளன.
ஒலிக்காத குரல்கள்
கோபிகிருஷ்ணனின் இந்த நூலை வாசிக்கும் எவர் ஒருவரும் நிச்சயம் ஒரு கட்டத்தில் நாமும் மனநோயாளிதானோ என்று யோசித்தே தீரவேண்டும் என்று நினைக்கிறேன். மிகச்சாதாரண விஷயங்கள் முதல், அதிர வைக்கும் விஷயங்கள் வரை இந்நூலில் மனநோயாக நடமாடுகின்றன.
