மேற்கத்திய அறிஞர்கள் அல்லது இந்தியாவில் உள்ள மக்கள் கூட நாட்டில் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று புகார் செய்யும்போது, வளர்ந்த நாடுகளுடன் இந்தியாவின் தற்போதைய நிலைமைகளை ஒப்பிட்டுச் சாடுகிறார்கள். ஆனால் கொஞ்சம் ரூம் போட்டு யோசித்தால், அமெரிக்கா போன்ற நாடுகள் ஆரம்பத்தில் மிகச் சிறிய சிறுபான்மையினர் (அதாவது நில உடமைகளை வைத்திருந்த ஆண் வெள்ளையர்கள்) மட்டுமே வாக்களிக்கும் வழக்கைக் கொண்டிருந்த ஜனநாயக நாடுகளாக உருவாகின என்பது தெரிய வரும்.
Category: இந்தியா
ஜன கண மன எவ்வகையை சேர்ந்தது? அதன் பொருள் என்னவாக இருந்தது?
தாகூர் பிரம்ம சமாஜத்தின் வாரிசு. இம்மார்க்கம், உபநிடத சித்தாந்தத்தை மட்டுமே துணையாகக் கொண்டுள்ள, பலருக்குப் புலப்படாத ஹிந்துயிச வழி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டது. பல்வேறு வண்ணங்களை உடைய கடவுள்களை கொண்ட பக்தி மார்க்க ஹிந்துயிசத்தை பார்த்து முகம் சுளிக்கக் கூடியது அந்த சமாஜம். எனவே தாகூர் யாரந்த இறைவன் என நேரடியாகக் கூறவில்லை. ஆனால், எண்ணிலடங்காக் காலமாக, மனித வரலாற்றில் யாத்திரீகர்களை அவர்களது பயணத்தில் முன் நடத்திச் செல்லும் நித்தியத் தேரோட்டி யாரென்பதை எவருமே சந்தேகமின்றி அனுமானம் செய்ய இயலும். அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்து கீதோபதேசம் செய்த கண்ணனையே தாகூர் இங்கு குறிப்பிடுகிறார்.
