பெரும் செல்வம் படைத்தவன், ஏன் ஒரு பசுவைக் கொடுக்க மறுத்தான்? நீ என்ன நினைக்கிறாய்?’
‘அவன் நாட்டைக் கேட்டது அந்த நிமிஷத்தில் எழுந்த கோபம். தான் என்னதான் தவறு செய்திருந்தாலும், அதற்காக நான் சினம் கொள்வேன், சபையில் அந்த சினத்தை வெளியே காட்டுவேன் என்று அவனுக்கு தோன்றியே இருக்காது. நாங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது அடித்திருந்தாலும் அது அவனுக்குத் தவறாகத் தெரிந்திருக்காது. அந்தக் கணம் வரைக்கும் அந்த உரிமை கொண்டவன் நான் ஒருவனே, ஏன் இன்றும் அந்த உரிமை கொண்டவன் நானே!’ என்று துருபதர் சொன்னார்.
Tag: அபிமன்யு
இறைவி
அவளது நிலை, அவளது துயரம், அவள் ஒரு அனாதை என்பது, கர்ப்பிணியான அவள் தம் கணவனால் சந்தேகப்படப்பட்டு அடித்து விரட்டப்பட்ட விவரம், எல்லாம் அவள் செவிகளில் அவள் குரலிலேயே மீண்டுமொருமுறை பேசப்பட்டன.
சில மாதங்களுக்கு முன் பேருந்து நிலைய நடைபாதையில், தம் இரு கை விரல்களும் முழுவதுமாக இழந்து விட்டிருந்த முதியவர் ஒருவர், மிகுந்த சிரமப்பட்டு உணவருந்திக்கொண்டிருந்தது, ஒரு பெட்டிக்கு கடையில் உட்கார்ந்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்த, முகம் முழுவதும் ஏதோ நோய் போல கொப்புளங்களும், வரிகளுமாய் சற்றும் பார்க்க சகிக்காதவாறு இருந்த, ஒருவர், என எப்போதோ பார்த்த அனைத்து சபிக்கப்பட்டவர்களும் அடுத்தடுத்து மனக்கண்ணில் தோன்றிச் சீனிவாசனை ஏதோ செய்தனர்.
