பின்வரும் நிழல்

வெயில் ஏறிவிட்டது. இனி அங்கு அமர முடியாது. கைகள் ஊன்றி எழுந்தேன். கொல்லை சின்னதுதான். வீடு கட்டும் போது கொல்லைக்கு இடம் விட்டு கட்ட வேண்டும் என்ற என்னுடைய பிடிவாதமே வென்றது. ஆற அமர உட்கார்ந்து காபி குடிக்க கொல்லைப்படிக்கட்டுகள் இல்லாமல் வாழ்வதெப்படி. கோடை வெயிலுக்கு கதவை திறந்து வைத்து விட்டால் மாலை நேரம் வெள்ளமாய் காற்று வரும்.

ஓயமாரி

அதிலேயும் தெலுங்கு ஆட்கள் வீடுன்னா தெலுங்குலயே பாடல்கள் பாடுவேன். சைவ சமயத்திலேயே, தீட்சை பெற்றவங்க வீடுன்னா, அவங்க இறுதி சடங்குகள் ரொம்ப அதிகம். அவங்களுக்கு ஆறு கலசங்கள் வைச்சு, நீராட்டி, புதைக்கனும், அந்த இடத்தில் லிங்கம் வைக்கனும், அதுக்கு அபிஷேகம், பூஜை செய்யனும்.