பின்வரும் நிழல்

வெயில் ஏறிவிட்டது. இனி அங்கு அமர முடியாது. கைகள் ஊன்றி எழுந்தேன். கொல்லை சின்னதுதான். வீடு கட்டும் போது கொல்லைக்கு இடம் விட்டு கட்ட வேண்டும் என்ற என்னுடைய பிடிவாதமே வென்றது. ஆற அமர உட்கார்ந்து காபி குடிக்க கொல்லைப்படிக்கட்டுகள் இல்லாமல் வாழ்வதெப்படி. கோடை வெயிலுக்கு கதவை திறந்து வைத்து விட்டால் மாலை நேரம் வெள்ளமாய் காற்று வரும்.

மணப்பு

வேலியில்  ஓடியிருந்த  பிரண்டைக்  கொடியில்  குழந்தையின்  மெலிந்த  விரல்களைப்போல  இளம்பச்சையில் பிரண்டைக்காய்கள். நுனியில்  சுருள்  வளைவுகளாய்  கொடி  நீண்டிருந்தது. அம்மா  கொடி  நுனிக்காய்களை  மட்டும்  கிள்ளி  எடுப்பாள். நடுக்காய்கள்  முத்தலாயிருக்கும்  என்பாள்.  இளங்காய்களைப்  பொடியாக  நறுக்கி  எண்ணெயில்  வதக்கி  மிளகாய், உளுத்தம்  பருப்பு  வறுத்து,  உப்பு, புளி  வைத்து  துவையலரைப்பாள். சூடான  “மணப்பு”