தத்தாரிகள்

‘எல் ஸாப்போ’ (என்றழைக்கப்பட்டவர்) சுவாவா நாய் வகைகளை எப்படி வளர்ப்பது என்று உரை ஒன்றை நிகழ்த்தினார், அது கேட்கவே அசிங்கமாக இருந்தது. ஸெக்சி இருபத்து மூன்றாவது விவிலியப் பாடலைப் பாடிய வண்ணம் இருந்தாள். அவள் அதன் சொற்களை வருடி வருடிப் பாடிய விதம் சிறிது ஆபாசமாக இருந்ததால் எல்லாரும் சிரித்தார்கள், அவளுடைய உணர்வுகள் புண்பட்டன.