அம்மா

அவளோட நகைச்சுவை கூட பயங்கரமாத்தான் இருந்தது. இத்தனை வருசங்கள்லேயும் அவ எழுதின தற்கொலை அறிவிப்புகள் எல்லாம், அதை எல்லாம் எனக்குத்தான் எழுதினா, வழக்கமா அதெல்லாம் ஜோக் போலத்தான் இருந்தது. தன் மணிக்கட்டுங்களை அறுத்துகிட்டாளே, அவ அந்தக் குறிப்பில ‘ப்ளடி மேரி’ன்னு கையெழுத்திட்டிருந்தா. அதிகமா தூக்க மாத்திரை சாப்பிட்டாளே அப்ப எழுதினா, அவள் தூக்கு போட்டுகிடத்தான் பார்த்தாளாம், ஆனா அப்டி தொங்கல்லெ விடறதுக்கு அவளுக்கு முடியல்லேன்னு எழுதினா.

தத்தாரிகள்

‘எல் ஸாப்போ’ (என்றழைக்கப்பட்டவர்) சுவாவா நாய் வகைகளை எப்படி வளர்ப்பது என்று உரை ஒன்றை நிகழ்த்தினார், அது கேட்கவே அசிங்கமாக இருந்தது. ஸெக்சி இருபத்து மூன்றாவது விவிலியப் பாடலைப் பாடிய வண்ணம் இருந்தாள். அவள் அதன் சொற்களை வருடி வருடிப் பாடிய விதம் சிறிது ஆபாசமாக இருந்ததால் எல்லாரும் சிரித்தார்கள், அவளுடைய உணர்வுகள் புண்பட்டன.