மிகிலிந்தேமிடி? (என்ன மிச்சம்?) என்ற நாவல் 

அழகே செல்வமாகக் கொண்டவள் என்ற சிறப்பு இருந்தாலும் சமுதாயத்தில் தாழ்வாக பார்க்கப்படுகின்ற குலத்தில் பிறந்தவள் என்ற தாழ்வு மனப்பான்மை அவளைப் பின்தொடர்ந்து கொண்டே இருந்தது. பிறருக்கு போகமளிக்கும் குலத்தில் பிறந்த பெண் திருமணம் செய்து கொண்டாலும் ஒரு ஆணையே  நம்பிக்கொண்டு வாழ்ந்தாலும் அவளுடைய கற்பு எப்போதும் சந்தேகப்படத்  தக்கது என்று எண்ணும் சமுதாயத்தில் வித்யா திருமணம் செய்து கொள்வதை   அவளுடைய தாய் விரும்பவில்லை. பெண் அனாவசியமாக கஷ்டங்களில் சிக்க கூடாது என்பது தாயின் அபிப்பிராயம்.