சிவராவின் அப்பா காலத்தில் தோலின் விலை கடுமையாகக் கூடிவிட்டது. மேலும் வெளிநாடுகளுக்கு தோல் ஏற்றுமதியாக ஆரம்பித்தது. பற்றாக்குறைக்கு ஏஜெண்டுகள் எல்லாக் கிராமங்களுக்கும் சென்று தேடிப் பிடித்து ஆட்டுத்தோல்களை வாங்கிச் சென்று விடுவர். கடைசியில் கணிகர்களுக்கு நோஞ்சான் ஆட்டுத்தோல் மட்டும்தான் கிடைத்தது. இதனால் கணிகர்கள் பலர் மிகவும் துன்பப்பட்டனர்.
