பக்தி நாவலின் முக்கிய புள்ளியாகிறது. கலை வெளிப்பாடுகளின் வழியே, பண்பாட்டு நிகழ்வுகள் வழியே பக்தியை காணும்போது அவற்றை அர்த்தமற்றவையாகவே நாயகன் கருதிக் கொள்கிறான். அஸீசுன் எனும் சிறிய கதாபாத்திரம் இடம் பெறுகிறது. அவர்கள் தங்களை மறந்து, பசியில் நடனமாடுகிறார்கள். நடனத்தின் வழியே ஒரு உன்மத்த நிலையை அடைய முயற்சிக்கிறார்கள். முதலாளித்துவ பார்வையில் தேவைகளை செல்வத்தின் மூலம் நிரப்பி விட முடியும். ஆழ்மன ஆசைகளையும் வேட்கைகளையும் செல்வத்தின் வழி நிறைவேற்றிவிட முடியும் எனும் போது செல்வமற்றவர்கள் எதைக் கொண்டு தங்களின் ஆழ்மனத் தேவைகளை நிறைவேற்றுகிறார்கள் ? நடனத்தின் வழியே எந்த இடைவெளியை அவர்கள் நிரப்ப முனைகிறார்கள் என்று சிந்திக்கிறான்.
