தொலைந்து போன பொருள்

முதலிரவன்று மனைவியுடன் முதன்முதல் சந்திப்பு ஏற்படும் முன்னர் சுதன்யா ஒரு சிட்டிகை பொடி உறிஞ்சி, தன நரம்புகளை சரியான நிலையில் வைக்க முயன்றிருக்கிறார். புது மனைவி ஹேமந்த பாலா முதன் முறையாக அருகில் வந்து மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டாள். ‘நீங்கள் பொடி போடுவீர்களா?’ வெட்கமடைந்த சுதன்யா சொன்னார். ‘நடுநடுவே கொஞ்சம் போடுவேன்.’ 

வக்கீலின் கடிதம்

அக்கம்பக்கத்தில் கரும்புத் தோட்டம் இருப்பதால் சிராஜ்ஜித்தௌலா சண்டையிட்ட யுத்தகளம் இப்பொழுது காடுமேடாகிக் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. அந்த மாம்பழத் தோட்டமும் இல்லை. இருந்தாலும் பலாஷி என்ற பெயர் மிகவும் சரித்திரப் புகழ் பெற்று விட்டது. ஸ்டேஷனுக்கு அருகே இந்த மீராபஜாரும் அந்தப் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. கல்கத்தாவிற்கு நான்கு மணி நேர வழி லாங்கோலா பாசஞ்சரில். கேஷ்டநகர் போகாமல் நல்ல பொருள் கிடைப்பது மிகவும் கஷ்டம்.