ஏப்ரல் 5 சனிக்கிழமை தரு பதிப்பகத்தாரால் ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன. மொழியாக்கம் செய்யப்பட்ட சிறுகதை தொகுப்புகள் இரண்டு. மலையாளத்திலிருந்து தமிழில் அரவிந்த் வடசேரி மற்றும் வட இந்திய மொழிகளிலிருந்து தமிழில் அனுராதா க்ருஷ்ணஸ்வாமியால் மொழிபெயர்க்கப்பட்ட கதைகளடங்கிய தொகுப்புகள். ஆவநாழி மின்னிதழ் ஆசிரியர் சுதேச மித்திரனின் ‘கோபுரம் தாங்கி’ சிறுகதை தொகுப்பின் இரண்டாம் பதிப்பு, ஆவநாழி மின்னிதழில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு மற்றும் ஓவியர் ஜீவா அவர்களின் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. இப்படியாக ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன.
Tag: கிரிதரன்
யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்
சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் நாவலை ஒவ்வோர் அத்தியாயமாக அவர் அனுப்பும்போது படித்திருந்தேன். முழு நாவலாக வெளியான பின்னர், ஒரு முறை முழுவதாகவும் சில பகுதிகளைத் தனித்தனியேயும் படித்திருக்கிறேன். சுனிலின் சிறுகதைகளையும் தொடர்ந்து படித்துவந்ததிலிருந்து அவரது கதைசொல்லும் பாணி எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக ஆகியிருக்கிறது. அதற்கான அடுத்தகட்டச் சாட்சியாக “யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்”
