ஓயமாரி

அதிலேயும் தெலுங்கு ஆட்கள் வீடுன்னா தெலுங்குலயே பாடல்கள் பாடுவேன். சைவ சமயத்திலேயே, தீட்சை பெற்றவங்க வீடுன்னா, அவங்க இறுதி சடங்குகள் ரொம்ப அதிகம். அவங்களுக்கு ஆறு கலசங்கள் வைச்சு, நீராட்டி, புதைக்கனும், அந்த இடத்தில் லிங்கம் வைக்கனும், அதுக்கு அபிஷேகம், பூஜை செய்யனும்.

கதவு

” பஞ்சாயத்துல தீர்வை பாக்கி கட்டலைன்னு, நேத்து சாய்ந்தரம் கதவ கழட்டி கொண்டு போய்ட்டாங்க. விடிஞ்சா, என் கடைசி பொண்ணு தங்கத்தை, பொண்ணு பார்த்து பரிசம் போட வராங்க. அடுத்த முகூர்த்த தேதியில கல்யாணம் முடிவாயிரும்.இப்ப இப்புடி ஒரு சூழ்நிலை. எனக்கு உதவி பண்ணு கந்தா” என்று பொன்னுசாமி கண்ணீர் விட்டு கலங்கி நின்றபடி கேட்டார்.

விசிட் விசா

சூசை அந்தத் தெருக்கூத்து பார்க்க வந்த ஒரு பொண்ணைக் காதலிச்சு அவளைக் கூட்டிக்கிட்டு ஓடிப் போயிட்டான். இரண்டு வருடத்துக்குப்பின் குடும்பத்தினரோடு சமாதானம் ஏற்பட்டது. அந்தத் திருச்சபையிலேயே ஒண்டி என்கிற பெயரை மாற்றி ‘சூசை’ன்னு ஞானஸ்தானம் வாங்கினான்.