மனிதர்கள் எப்படி பெரும் துயர் களை எதிர் கொள்கிறார்கள் என்பது இந்த நாவலில் காட்டப்படுகிறது. முகாமில் வசதிகளே இல்லாத பொழுதும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கின்றனர். தம் பசியை விட வழியில் சந்திப்பவர்களின் துன்பமும் பசியும் பெரிது என்று உதவுகின்றனர். தனித்தனிக் குடும்பங்களாகப் பயணிப்பவர்கள், வழியில் ஒன்றிணைந்து ஒரு பெரிய சமூகமாக மாறுகிறார்கள். மனிதநேயம் மற்றும் ஒற்றுமையே பிழைப்பதற்கான ஒரே வழி என்பதை ரூட் 66 பயணம் கற்பிக்கிறது. ரூட் 66 பயணம் செய்பவர்கள் எல்லாச் சவால்களையும் கடந்து நம்பிக்கை இழக்காமல் விடாமுயற்சியுடன் இடம் பெயர்ந்து தமக்கான வாழ்க்கையை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.
