ஆடு

மணியக்காரனின் வீட்டின் முன்னால் ஆடுகள் கட்டிப்போடப்பட்டிருந்தன. இந்த ஆடுகளை யார் அறுத்துத்தருவார்? எல்லோரும் மரசெருப்பே போட முடியுமா? யாருக்கும் தோல் செருப்பு வேண்டாமா? தோல் எடுத்து தந்தால் கீழ் சாதியா? மாமிசம் சாப்பிடுபவனெல்லாம் கீழ் சாதியா என்று அவள் மனத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. திடீரென்று திரும்பி நெடுமாறன் என்ன சாப்பிடுறான். வெறும் பருப்புசாதம் சாப்பிட்டுட்டு சண்டை போடப்போவானா என்று கிழத்தி நாகம்மையை கேட்டாள்.