ஜெயந்தி சூரம்மா & தேவமணி சத்யநாதன்

தெலுங்கில் நாவல் செயல்முறையை எடுத்து வந்தார்களே தவிர, ஆரம்ப காலங்களில் அதனை எந்தப் பெயரால் அழைப்பது என்பதை அறிந்திருக்கவில்லை. சில நாட்கள் அதற்கு முன்னால் அறிந்திருந்த பிரபந்தம் என்ற இலக்கிய வடிவின் சிறப்பைக் கூறும் உரைநடைச் செய்யுள் என்ற பொருளில் ‘வசனப் பிரபந்தம்’ என்று அழைத்தார்கள். கந்துகூரி வீரேசலிங்கம், ‘ராஜசேகர சரித்திரம்’ என்ற நாவலுக்கு விமரிசனம் எழுதுகையில், ‘காசீபட்ட ப்ரஹ்மய்ய சாஸ்த்ரியின் நவல’ என்ற பெயரை பயன்படுத்தினார். புதிய என்ற பொருள் படும் ‘நவ’ என்ற சொல்லின் ஆதாரத்தோடு  நாவல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அருகாமையில் விளங்கும் ‘நவல’ என்ற சொல், அன்று முதல், நாவல் என்ற முயற்சியின் தெலுங்குப் பெயராக நிலைபெற்றது. ‘நவல’ என்பது தேசியச் சொல். ‘பெண்’ என்பது அதன் பொருள். 

இருபத்தாறு ஆண்களும் ஒரு பெண்ணும்

நாங்கள் வெளியில் இருந்து வரும்போது எங்கள் கால்களில் ஒட்டிக் கொண்டு வரும் தூசியும் புழுதியும் பிஸ்கெட் தயாரிக்க பயன்படுத்தும் மாவோடு சேர்ந்து நாற்றமெடுக்கும். அந்த நாற்றத்தோடு சூடாக இருக்கும் அந்த குறுகிய பேஸ்மெண்ட்டில் நாங்கள் மாவை இழுத்துப் பிசைந்து பிஸ்கட் வடிவில் வெட்டுவோம். எங்கள் வியர்வை கூட அதோடு சேர்ந்து வடிவமைக்கும். எங்களுக்கு அந்த வேலை மீது எத்தனை வெறுப்பு, அசிங்கம் என்றால், எங்கள் கையால் செய்த அந்த பிஸ்கட்டுகளை நாங்கள் ருசி பார்ப்பதற்காகக் கூட தின்ன மாட்டோம்.

சுதந்திர பூமியில்… (In the Land of the Free)

“பொழுது விடிந்துவிட்டது. போய்க் குழந்தையை அழைச்சுட்டு வா” என்றாள். கூறுவதற்குள் அவளுக்குத் தொண்டையை அடைத்தது….
“இன்னும் நேரம் ஆகவில்லை” என்றவன் மீண்டும் படுக்கையில் தலையைச் சாய்த்தான்.
“இன்னும் நேரம் ஆகலையா? ஐயோ…! நேற்றுவரை நான் வாழ்ந்த நேரம் எல்லாம் சேர்த்தால்கூட நான் பெற்ற பிள்ளையை என்னிடமிருந்து பிரித்து எடுத்துச்சென்ற நேரம் இருக்காது.” லேசூ முகத்தை மூடிக்கொண்டு கட்டில் அருகில் கீழே அமர்ந்தாள்.

டாக்டர் முக்தேவி பாரதி – ஓர் அறிமுகம்

இலக்கிய உலகில் தற்போது காணப்படும் பெண்ணீயம், தலித் படைப்புகள், இடதுசாரி இலக்கியம், வலதுசாரி இலக்கியம் போன்ற அனைத்து வாதங்கள், இயங்கள், பிரிவுகள் பற்றி அறிந்திருந்தாலும் அவை எதிலும் சேராமல் மனிதாபிமானத்தோடு கூடிய படைப்புகளே தன்னுடையவை என்ற அவர் கூற்று, அவருடைய சிறு கதைகள், நாவல்கள், கவிதை, கட்டுரை நூல்கள், பத்திகள், விமரிசனக் கட்டுரைகள் போன்ற அனைத்திலும் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது. எத்தகைய படைப்பாயினும் தனக்கான முத்திரையோடு வாசகர்களை சென்றடைவது அவருடைய தனித்திறமை.

“நிரந்தரம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!” – முக்தேவி பாரதியுடன் ஒரு நேர்காணல்

நேர்காணல் – ராஜி ரகுநாதன் எழுத்தாளர் முக்தேவி பாரதியைப் பற்றிய அறிமுகம் கேள்வி: அம்மா! உங்கள் சிறுவயது வாழ்க்கை, உங்கள் ஊர், பள்ளிப் படிப்பு பற்றி கூறுங்களேன்: பதில்: நான் பிறந்தது 1940ல் கிருஷ்ணா ஜில்லாவில் ‘பெடனா’ என்ற கிராமம். அங்கு என் தாத்தா சப் ரிஜிஸ்ட்ரார் ஆக ““நிரந்தரம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!” – முக்தேவி பாரதியுடன் ஒரு நேர்காணல்”